அய்யோ 25 கோடி போச்சே.! மகளுக்கு கொலை மிரட்டல்! நடிகை கௌதமி காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார்..!
நடிகை கௌதமி தன்னிடம் இருந்து, 25 கோடி ரூபாய் சொத்துக்களை மோசடி செய்து விட்டதாகவும் தன்னுடைய மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்து வருவதாகவும் காவல்துறை ஆணையரிடம் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார்.
Veteran Actress Gauthami
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் கௌதமி. குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன், பிரபு, சரத்குமார், சத்யராஜ், மோகன் லால், மாமூட்டி, உள்ளிட்ட ஏராளமான நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
Kamalhassan And Gowthami Love Controversy:
குறிப்பாக நடிகர் கமல்ஹாசனும் கௌதமியும் 90களில் சில காதல் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். அந்த சமயத்தில் கௌதமிக்க திருமணமாகவில்லை என்றாலும், கமலுக்கு திருமணமாகி ஸ்ருதி மற்றும் அக்ஷாரா என இரண்டு மகள்கள் இருந்தனர். பின்னர் இருவரும் பரஸ்பரமாக தங்களுடைய முடிவை மாற்றிக் கொண்டு கொண்டதாகவும், அதன் பின்னரே கௌதமி அமெரிக்காவைச் சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாக கூறப்பட்டது.
Gauthami divorce and Living Relationship:
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்று கௌதமி இந்தியாவுக்கு திரும்பிய பின்னர், புற்றுநோயால் அவதிப்பட்டபோது நடிகர் கமலஹாசன் தான் கௌதமிக்கு உறுதுணையாக இருந்தார். மேலும் இருவரும் பல வருடங்கள் லிவிங் டு கெதர் முறையில் வாழ்க்கை நடத்திய நிலையில், பின்னர் கௌதமி தன்னுடைய மகள் சுப்புலட்சுமி எதிர்காலம் கருதி, கமலஹாசன் இடம் இருந்து விலகுவதாக அறிவித்தார்.
Gautami Police Complaint :
தற்போது தன்னுடைய மகளுடன் தனியாக வசித்து வரும் கௌதமி, சென்னை காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில் ஸ்ரீபெரும்புதூர் உட்பட தமிழகத்தில் உள்ள ஒரு சில பகுதிகளில் தனக்கு சொத்துக்கள் இருப்பதாகவும், தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அந்த சொத்துக்களை விற்பதற்கு பவர் ஏஜெட்டாக அழகப்பன் என்பவரை நியமித்ததாகவும் தெரிவித்துள்ளார்.
Gauthami lodges shocking police complaint 25 crore fraud
ஆனால் அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தனது கையெழுத்துக்களை வைத்து, போலியான ஆவணங்களை உருவாக்கி சொத்துக்களை அபகரித்துள்ளதாகவும், நான்கு விதமான மோசடிகளை தனது வங்கி பரிவர்த்தனைகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் கண்டுபிடித்ததாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேட்டபோது தன்னுடைய அரசியல் மற்றும் அதிகார பலத்தால் தன்னை மிரட்டுவதாகவும், தன் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் கௌதமி.
Police Investigate:
இந்த பிரச்சனையால் தன்னுடைய மகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார். மேலும் சுமார் 25 கோடி மதிப்புள்ள சொத்துக்களை அபகரித்த அழகப்பனிடம் இருந்து தன்னுடைய சொத்துக்களை மீட்டு ஒப்படைக்க வேண்டும் என்றும், இந்த மோசடிகள் ஈடுபட்ட அழகப்பன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கௌதமி கூறியுள்ளார்.
Gautami Daughter Death Threat:
இந்து சம்பவம் தற்போது திரையுலகினர் மத்தியிலும் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த புகார் மனு தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதேபோல் அழகப்பன் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.