MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • 'எதிர்நீச்சல்' சீரியலில் மாரிமுத்து குணசேகரனாக வரும் கடைசி நாள்..! கையும் களவுமாக பிடிச்சிட்டாரா..! புரோமோ!

'எதிர்நீச்சல்' சீரியலில் மாரிமுத்து குணசேகரனாக வரும் கடைசி நாள்..! கையும் களவுமாக பிடிச்சிட்டாரா..! புரோமோ!

எதிர்நீச்சல் சீரியலில் மாரிமுத்து குணசேகரனாக நடிக்கும் கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படும் நிலையில், இன்றைய ப்ரோமோ வெளியாகி சீரியல் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.   

2 Min read
Author : manimegalai a
| Updated : Sep 11 2023, 07:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16

சன் டிவி தொலைக்காட்சியில் தினம்தோறும் இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் 'எதிர்நீச்சல்' தொடருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. வீட்டில் என்ன வேலை இருந்தாலும் இந்த சீரியலுக்காக டைம் ஒதுக்கிக்கொண்டு பார்க்கும் இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை பலர் உள்ளனர். இப்படி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த சீரியலின் வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக இருந்தவர் மாரிமுத்து.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
26

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்களை சோகத்தில் ஆழ்த்தியது. இந்த அதிர்ச்சியில் இருந்து இன்னும் பலர் மீண்டு வரவில்லை என்றே கூறலாம். காரணம் 'எதிர்நீச்சல்' சீரியலில் யாராலுமே ஈடு செய்யமுடித்தாத ஒரு தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி வந்தார் குணசேகரன். 

Jawan: குறிச்சி வச்சிக்கோங்க..! இன்னும் ஒரே நாள் தான்! 'ஜெயிலர்' ஆல் டைம் வசூலை பீட் பண்ண போகும் 'ஜவான்'!

36

எனவே இவருடைய கதாபாத்திரத்தை யார் ஏற்று நடித்தாலும், இவர் இடத்தை நிரப்ப முடியாது என்கிற விமர்சனங்களும் எழுத்து வருகிறது. ஆனால்  சீரியலை தொடர்ந்து ஒளிபரப்ப வேண்டும் என்கிற சூழலில் சீரியல் குழு உள்ளது. எனவே குணசேகரன் கதாபாத்திரத்தில் யாரை நடிக்க வைத்தால் நன்றாக இருக்கும் என்கிற, தீவிர தேடுதல் ஒரு பக்கம் பரபரத்துக் கொண்டுள்ளது. 

46

இந்நிலையில் மாரிமுத்து, குணசேகரன் ஆக நடிக்கும் கடைசி எபிசோட் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் நந்தினி ஜனனி கூட்டி வரும் காரில் தாங்கள் சமைத்த சாப்பாடுகள் அனைத்தையும் ஏற்றிக்கொண்டிருக்க, சரியான நேரத்தில் குணசேகரன், ஞானம் மற்றும் கதிர் வீட்டு வாசலில் வந்து இறங்குகிறார்கள். 

நடிகை ஜெனிலியா 3வது முறை கர்ப்பம்..? தீயாக பரவிய செய்தி.. கணவர் ரித்தேஷ் சொன்ன ‘நச்’ பதில்..

56

 அங்கு நந்தினி, சக்தி, ரேணுகா என எல்லோரும்... சாப்பாட்டுடன் நிற்பதை பார்த்து விட்டு, ஏதோ சோறாக்கி எடுத்துக்கிட்டு போற மாதிரி இருக்கு என கேட்க, அதற்க்கு நந்தினி "எப்போதும் போல் சும்மா கேள்வி கேட்டு இருக்காதீங்க... சாமி குத்தம் ஆகிடும்." என்று சொல்கிறார். உடனே கதிர் "அப்போ வா நானும் சேர்ந்து வரேன் நாலு பேருமா சேர்ந்து போயிட்டு வந்துரலாம் என்று நந்தினியிடம் கூற, அதற்கு நந்தினி இந்த நாலு... 40 எல்லாம்... மாமாவுக்கு சுத்தமா பிடிக்காது என சொல்ல, அதற்கு குணசேகரன் ஏய் மரியாதையா உண்மைய சொல்லிடு என நந்தினியை மிரட்டுகிறார்.

66

பின்னர் உள்ளே வந்து டைனிங் ஹாலில் அமரும் குணசேகரன், தன்னுடைய அம்மா விசாலாட்சியிடம்,  சோத்த பொங்கி வீட்டு பொம்பளைங்க கிட்ட எங்க அனுப்பி வெச்சி இருக்கு அப்படியே கேட்டு  சொல்லுங்கப்பா என கூற, விசாலாட்சி ஒன்றும் புரியாமல் திருத்திருவென முழித்துக் கொண்டு நிற்கிறார். பின்னர் ரேணுகா, சைகை மூலம் பாபா பாபா என கூற, ஒரு வழியாக புரிந்து கொண்டு விசாலாட்சி இன்றைய எபிசோடில் சமாளிப்பார் என தெரிகிறது. மேலும் இன்றைய எபிசோடோடு குணசேகரன் வரும் காட்சி நிறைவடையும் என கூறப்படுகிறது. எனவே அடுத்து குணசேகரன் யாராக  இருப்பார் என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. அதே நேரம் தற்போது குணசேகராக நடித்துவரும் மாரிமுத்துவை யாராலும் பீட் பண்ண முடியாது என்பது மட்டும் நிதர்சனமான உண்மை.

இது என்ன ரம்பா ஸ்டைலா? தொடையழகை காட்டி இளசுகளின் தூக்கத்தை கெடுக்கும் பிரியா பவானி ஷங்கர்! ஹாட் போட்டோஸ்!

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனிக்காக சக்தி எடுத்த அதிரடி முடிவு.... கல்யாணத்தில் காத்திருக்கும் ட்விஸ்ட்
Recommended image2
Siragadikka Aasai : சிந்தாமணியின் முகத்திரையை கிழித்த பைனான்சியர்.... முத்துவின் பிளான் சக்சஸ்
Recommended image3
Ethirneechal Thodargiradhu : ஈஸ்வரியை கேள்விகளால் மடக்கிய நீதிபதி, ஓங்கும் ஜனனியின் கை.! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved