“என் அப்பாவால தான் என் வாழ்க்கையே நாசமா போச்சு.. அவரு பேச்சை கேட்டதால்.. ” வனிதா விஜயகுமார் உருக்கம்..
வனிதா தனது தந்தை விஜயகுமார் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் – மஞ்சுளா தம்பதிக்கு பிறந்த மூத்த மகள் தான் வனிதா. தளபதி விஜய்க்கு ஜோடியாக ‘சந்திரலேகா’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான வனிதா விஜயகுமார் சில படங்களில் நடித்துள்ளார்.இதை தொடர்ந்து 2000-ம் ஆண்டு நடிகர் ஆகாஷை திருமணம் செய்து செட்டில் ஆனார்.
vanitha vijayakumar
தொடர்ந்து அதே ஆண்டில் ஆனந்த் என்ற தொழிலதிபரை மணந்தார். பின்னர் அவரையும் விவாகரத்து செய்து விட்டார். கடைசியாக கூட பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்த வனிதா அவரையும் பிரிந்துவிட்டார். தங்கள் நடிப்பு மற்றும் திறமை மூலம் சிலர் மக்கள் மத்தியில் பிரபலமாவார்கள். சிலர் நெகட்டிவ் விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகளின் மூலம் பிரபலமாவார்கள்.
பிரபல நடிகை வனிதா விஜயகுமார் இதில் 2வது வகை. தனது பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் இருந்த கருத்து வேறுபாட்டை மீடியா முன்பு வந்து பேசியது தொடங்கி தனது திருமண வாழ்க்கை வரை பல சர்ச்சைகள் மூலம் பிரபலமானவர் வனிதா.
vanitha vijayakumar
வனிதாவின் திருமண வாழ்க்கையும், அவரின் குடும்ப பிரச்சனைகளும் திறந்த புத்தகமாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்பு வனிதா மற்றும் அவரின் குடும்பத்தினர் இடையேயான சண்டை பெரிய அளவில் பூதாகரமாக வெடித்தது. இந்த சண்டையை தொடர்ந்து வனிதாவை அவரின் மொத்த குடும்பத்தினரும் ஒதுக்கி வைத்துவிட்டனர். இதை தொடர்ந்து வனிதா தனது மகள்களை தனியாக வளர்த்து வருகிறார்.
இந்த நிலையில் வனிதா தனது தந்தை விஜயகுமார் குறித்து பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் பேசிய வனிதா “ எனது அப்பா சமீபத்தில் கொடுத்த பேட்டியில், எனது மகள்கள் எப்படி என்று ஒவ்வொரு பெயரையும் சொல்லி விளக்கமளித்தார். அதில் கவிதா, அனிதா, அருண் விஜய், அடுத்ததாக என் பெயரை சொல்லாமல் ப்ரீத்தா, ஸ்ரீ தேவி என்று பேசியிருந்தார். படையப்பா படத்தில் நீலாம்பரி பார்ப்பது போல் நான் அந்த வீடியோ குறைந்தது 10 முறையாவது பார்த்திருப்பேன்.
என் பேச்சை கேட்ட பிள்ளைகள் என்று என்னை தவிர மற்ற பிள்ளைகளின் பெயரை என் அப்பா சொன்னார். அவர் வேண்டுமெனில் என்னை பிள்ளை என்று சொல்லாமல் இருக்கலாம், என் பெயரை சொல்லாமல் விடலாம். அனால் உலகம் அப்படி சொல்லாது. நான் எப்போதும அவரின் பிள்ளை தான். திருமணமான புதிதில் என் பெயரை என்ன மாதிரி குறிப்பிட வேண்டும் என்று கேட்ட போது நான் வனிதா விஜயகுமார் என்று கூறிவிட்டேன். அதனால் தான் இப்போதும் எனக்கு அந்த பெயரே இருக்கிறது.
ஒருவேளை வனிதா ஆகாஷ் என்று வைத்திருந்தால், தொடர்ந்து எத்தனை முறை எனது பெயர் மாறியிருக்கும் என்று சிரித்துக்கொண்டே வனிதா தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர் “ அப்பா பேச்சை கேட்ட ஒரே பிள்ளை என்றால் அது நான் தான். அவரால் தான் என் வாழ்க்கையே சீரழிஞ்சு போச்சு. என்னுடைய வாழ்க்கை எப்படி எப்படியோ இருந்திருக்கும். ஆனால் அவரின் பேச்சை கேட்டதால் தான் என் வாழ்க்கை இந்தளவுக்கு மாறி உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
வனிதாவின் இந்த வீடியோ பழைய வீடியோ தான் என்றாலும், சமீபத்தில் விஜயகுமார் பேத்தி தியாவின் திருமணத்திற்கு வனிதாவை அழைக்காமல் ஒதுக்கி வைத்தனர். இந்த நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.