மிக்ஜாம் புயலால் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு.. தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்த நடிகர் விஜய்..
சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு அரசுடன் இணைந்து உதவிகளைச் செய்யுமாறு நடிகர் விஜய் தனது ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
Vijay Request
மிக்ஜாம் புயல் சென்னையை புரட்டிபோட்டுள்ளது. நிவாரணப் பணிகள் அரசு மற்றும் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் செய்து வரும் நிலையில் நடிகர் விஜய் முக்கிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Vijay
சென்னையில் மிக்ஜாம் புயல் மற்றும் வரலாறு காணாத இடைவிடாமல் பெய்த கன மழையினால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான மரங்கள், முறிந்து விழுந்துள்ளன. மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. சாலைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளது. உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
Actor Vijay
மாநகராட்சி ஊழியர்களும், தூய்மைப் பணியாளர்களும், தேசிய பேரிடர் மீட்பு படையினரும் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் விஜய் எக்ஸ் சமூக தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் "மிக்ஜாம்" புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர்.
Vijay Makkal Iyakkam
ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.
Michaung Rescue
இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக்கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர்துடைப்போம்” என்று பதிவிட்டுள்ளார் நடிகர் விஜய்.
குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா