Sundar C : "எல்லாம் கடவுளின் அருள்".. குஷ்பு பற்றி பலர் அறியாத ஒரு விஷயம் - மனம் திறந்த கணவர் சுந்தர் சி!
Director Sundar C : பிரபல இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நாளை அரண்மனை 4 திரைப்படம் உலக அளவில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே இப்படத்தின் 3 பாகங்களும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
Muraimaanan
கடந்த 1995 ஆம் ஆண்டு தமிழில் வெளியான "முறைமாமன்" என்கின்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் திரை உலகில் அறிமுகமானவர் தான் சுந்தர் சி. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயராமனோடு இணைந்து நடிகை குஷ்பூ நடித்திருப்பார்.
Actress Khushbu
இந்த திரைப்படத்தின் மூலம் தான் குஷ்பு மற்றும் சுந்தர் சி ஆகிய இருவரிடையே காதல் மலர்ந்தது. அதன் பிறகு கடந்த 2000வது ஆண்டு இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். கடந்த 24 ஆண்டுகளாக மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகின்றனர் இந்த தம்பதியினர்.
director sundar c
இந்நிலையில் தனது அரண்மனை திரைப்படத்தில் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டிருக்கும் சுந்தர் சி குஷ்புவை பற்றிய ஒரு தகவலை பகிர்ந்து இருக்கிறார். நான் என காதலை கூறியபோது அவரும் அதை ஒப்புக்கொண்டார். ஆனால் அப்பொழுது அவருக்கு உடல்நிலை சற்று சரியில்லாமல் இருந்தது, நாங்கள் மருத்துவரை அணுகினோம்.
Sundar c Family
குஷ்புவை சோதித்த மருத்துவர்கள், அவரால் குழந்தை பெற்றுக்கொள்ள இயலாது என்று கூறியதும் குஷ்பூ என்னை வேறொரு பெண்ணை மணந்து கொள்ளுமாறு வற்புறுத்தினார். ஆனால் இறுதிவரை நம் இருவருக்கும் குழந்தை இல்லை என்றால் நாம் இருவரும் நமக்கு குழந்தைகளாக இருப்போம் என்று கூறி அவரை சமாதானப்படுத்தி திருமணம் செய்து கொண்டேன். ஆனால் கடவுளின் அருளால் இன்று எங்களுக்கு ஒன்றல்ல இரண்டு குழந்தைகள் இருப்பதை எண்ணி மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.