அவர்களோடு இணைந்து ஹிட் குடுத்துட்டாரு.. அடுத்தது நான் தான் - எஸ்.ஜே. சூர்யாவை புகழ்ந்த ராகவா - ஏன் தெரியுமா?
தமிழ் சினிமாவில் குரூப் டான்ஸராக அறிமுகமாகி, அதன் பிறகு டான்ஸ் அசிஸ்டன்டாக பதவி உயர்வு பெற்று, இன்று முன்னணி நடன இயக்குனராகவும், முன்னணி நடிகராகவும் திகழ்ந்துவரும் ஒருவர் தான் ராகவா லாரன்ஸ் அவர்கள். தற்பொழுது பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
Jigarthanda Double X
கடந்த 2014 ஆம் ஆண்டு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெகு ஜோராக உருவாகி வருகிறது. இந்த திரைப்படத்தில் பிரபல நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிப்பு அசுரன் எஸ்.ஜே சூர்யா ஆகிய இருவரும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் இன்று இந்த திரைப்படத்திலிருந்து முதல் சிங்கிள் பாடலான "மாமதுரா" தற்பொழுது வெளியாகி உள்ளது. இன்று சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த முதல் சிங்கிள் பாடல் வெளியிடப்பட்டது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ராகவா லாரன்ஸ் அவர்கள், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் ஒரு மாடர்ன் மணிரத்தினம் என்று தெரிவித்துள்ளார்.
Jigarthanda
மேலும் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான ஜிகர்தண்டா திரைப்படத்தில் பாபி சிம்ஹா நடித்த அசால்ட் சேது கதாபாத்திரத்தில் நடிக்க முதலில் தான் தான் ஒப்பந்தமானதாகவும், ஆனால் அப்பொழுது அந்த வாய்ப்பு தவறி போனது என்றும் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த முறை அதேபோன்ற ஒரு கதாபாத்திரம் தனக்கு கிடைத்துள்ளது தனக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
SJ Suryha
இந்த திரைப்படத்தில் தன்னுடன் இணைந்து நடித்துவரும் சக நடிகர் எஸ் ஜே சூர்யாவை பற்றி பேசிய ராகவா லாரன்ஸ் அவர்கள், ஏற்கனவே சிவகார்த்திகேயன் அவர்களுடன் இணைந்து டான் என்ற வெற்றி திரைப்படத்தை அவர் கொடுத்தார். அதன் பிறகு விஷால் அவர்களுடன் இணைந்து மார்க் ஆண்டனி என்ற வெற்றி திரைப்படத்தையும் எஸ். ஜே. சூர்யா அவர்கள் கொடுத்துள்ள நிலையில், அடுத்தபடியாக என்னுடன் இணைந்து அவர் நடிக்கும் இந்த திரைப்படமும் ஒரு சூப்பர் ஹிட் திரைப்படமாக மாற உள்ளது என்று அவர் எஸ் ஜே சூர்யாவிற்கு புகழாரம் சூட்டினார்.