அஜித்துக்கு மூளையில் 4 மணிநேரம் நடந்த தீவிர அறுவை சிகிச்சை! தற்போதைய நிலவரம் என்ன? வெளியான அப்டேட்!
தல அஜித்துக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல், அவரது ரசிகர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் அஜித். ரசிகர்கள் மீது கொண்ட அன்பால், தன்னுடைய ரசிகர் மன்றத்தை களைத்து உங்களின் குடும்பத்தை நீங்கள் நல்ல படியாக பார்த்து கொள்வது தான் எனக்கு மிகப்பெரிய சந்தோஷத்தை கொடுக்கும் என கூறியவர். மேலும் தன்னால் முடிந்தவரை, அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்டவர் சிறந்த மனிதர்.
ஒரு நடிகராக திரையுலகில் மிகப்பெரிய உயரத்தை அடைந்து விட்ட பின்னரும் தனக்குள் இருக்கும் தேடுதலை விட்டுவிடாமல், போட்டோ கிராப்பி, சமையல் கலை, ஏரோ மாடலிங், பைக் ரேஸ், போன்றவற்றில் அதிக கவனம் செலுத்தி வருபவர். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களாக, இந்த உலகையே பைக்கில் சுற்றிவர வேண்டும் என்கிற முயற்சியிலும் இறங்கினார்.
மேலும் தற்போது இவர் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் தற்போது விடாமுயற்சி படத்திலும் நடித்து வருகிறார். மார்ச்ச 15-ஆம் தேதி இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு மீண்டும் அஜர்பைஜான் நாட்டில் துவங்க இருந்த நிலையில், நேற்று திடீர் என அஜித் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
உடல் முழுவதும் அவருக்கு பரிசோதனை செய்தபோது, அஜித்துக்கு மூளையில் கட்டி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும் இதை தொடர்ந்து சுமார் 4 மணிநேரம் அவருக்கு அறுவை சிகிச்சை செய்து மூளையில் உள்ள கட்டியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். இந்த அறுவை சிகிச்சையை அப்போலோ மருத்துவமனையின் டாக்டர் பெரியகருப்பன் தலைமையிலான மருத்துவர்கள் மற்றும் கேரளா, மதுரையில் இருந்து வரவைக்கப்பட்ட 2 மருத்துவர்கள் மேற்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தற்போது மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் அஜித் இருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.