ஐபிஎல் 2025 ஏலத்தில் எடுக்கப்பட இருக்கும் அமெரிக்கா வீரர்கள் யார் யார் தெரியுமா?
வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் அமெரிக்கா அணிக்காக சிறப்பாக விளையாடி வரும் மோனன்க் படேல், ஆரோன் ஜோன்ஸ் மற்றும் சவுரப் நெட்ராவால்கர் ஆகியோர் எடுக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Aaron Jones
ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதுவரையில் 17 சீசன்கள் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. கடைசியாக நடைபெற்று ஐபிஎல் 2024 தொடரின் இறுதிப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் சாம்பியனானது.
Monank Patel
இதையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டு 18ஆவது சீசன் நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான ஐபிஎல் ஏலத்தில் அமெரிக்கா அணியைச் சேர்ந்த மோனன்க் படேல், ஆரோன் ஜோன்ஸ் மற்றும் சவுரப் நெட்ராவால்கர் ஆகியோர் எடுக்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.
IPL 2025 Auction
தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடரில் அமெரிக்கா விளையாடிய 2 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. இதில், மோனன்க் படேல், ஆரோன் ஜோன்ஸ், சவுரப் நெட்ராவால்கர் ஆகியோர் சிறப்பாக பந்து வீசி அனைவரிடமும் பாராட்டுகளை பெற்று வருகின்றனர்.
Monank Patel, T20 World Cup 2024
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் சூப்பர் ஓவரில் சிறப்பாக வீசி அமெரிக்கா அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்தியாவைச் சேர்ந்த சவுரப் நெட்ராவால்கர். அமெரிக்கா அணியின் கேப்டனான மோனன்க் படேல் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அரைசதம் அடித்தார்.
USA vs Pakistan, T20 World Cup 2024
படேல் விளையாடிய 27 டி20 போட்டிகளில் 507 ரன்கள் எடுத்துள்ளார். இதில், 3 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போன்று இந்த டி20 உலகக் கோப்பை தொடரில் கனடா அணிக்கு எதிரான போட்டியில் ஆரோன் ஜோன்ஸ் 94* ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
T20 World Cup 2024
ஜோன்ஸ் விளையாடிய 28 போட்டிகளில் 514 ரன்கள் எடுத்துள்ளார். மேலும், 29 டி20 போட்டிகளில் விளையாடிய சவுரப் நெட்ராவால்கர் 29 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.