Aadujeevitham Box Office: 14 வருட உழைப்புக்கு கிடைத்த பெருமை! 100 கோடி வசூலை எட்டிய 'ஆடுஜீவிதம்' திரைப்படம்!
பல ரசிகர்கள் மற்றும் பிரபலங்களின் பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கும் ’தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம், ரூபாய்.100 கோடி வசூலை எட்டியுள்ளதாக அதிகார பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய சினிமாவின் பெருமை என ரசிகர்களால் புகழப்படும் 'தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்' திரைப்படம் மார்ச் 28, அன்று திரையரங்குகளில் வெளியானது. இந்த படம், உயிர் பிழைக்க போராடிய நஜீப் என்பவரின் ரியல் லைப் அட்வென்ச்சர் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது.
அதாவது சாதாரண மனிதர்களால் சமாளிக்க முடியாத சவாலை, ஒருவர் வாழ்க்கையில் எதிர்கொண்டால் அந்த மனிதர் தலைசிறந்த மனிதராக மாறுகிறார். பின்னர் அவரை மற்றவர்களால் ஒரு போர் வீரரை போல் பார்ப்பவர். அப்படி உயிர் பிழைக்க பாலைவனத்தில் போராடி... மீண்டவர் தான் ஆடுஜீவிதத்தின் ரியல் கதாநாயகன் நஜீப். இவரை பற்றிய கதை தான் இப்படம்.
தன்னுடைய சொந்த நாடான கேரளாவை விட்டு வெளியேறி, கை நிறைய சம்பாதிக்க வேண்டும் என்கிற ஆசையில், வெளிநாடு சென்று அங்கு எரியும் பாலைவனம், வறண்ட சூழல் மற்றும் வெப்பதால் வடியும் வியர்வை ஆகியவற்றிலிருந்து தப்பிக்க விடாமுயற்சியுடன் போராடிய மனிதர் தன்னுடைய முயற்சியில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தி இருந்தது ஆடுஜீவிதம் திரைப்படம்.
மேலும் அங்கு தன்னைக் கொடூரமான முறையில் துன்புறுத்திய முதலாளியைத் தவிர, எந்த மனித தொடர்பும் இல்லாமல் அந்த பாழடைந்த பாலைவனத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்த நஜீப் கற்பனை செய்ய முடியாத பல துன்பங்களை அனுபவித்தவர். அடிப்படைத் தேவைகள் இன்றிப் போராடிய அவருக்கு மாற்றுவதற்கு உடைகள் கூட கொடுக்கப்பட வில்லை. 700 ஆடுகளைக் கொண்ட மந்தையை தனி ஆளாகப் பார்த்துக் கொண்டிருந்தார். நாள் ஆக ஆக, மனிதநேயத்தின் மீதான நம்பிக்கையை இழந்த அவர் தன்னையும் ஆடுகளில் ஒன்றாக அடையாளம் காணத் தொடங்கினார். இப்படியான நிலையில் எப்படி மீண்டார் என்பதே இப்படத்தின் கதைக்களம்.
நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘தி கோட் லைஃப்- ஆடுஜீவிதம்’ படம் பென்யாமின் எழுதிய சுயசரிதை புத்தகத்தை அடிப்படையாகக் கொண்ட கதை. இந்தத் திரைப்படம் மார்ச் 28-ஆம் தேதி வெளியாகி, அணைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த இப்படம்... வெளியான சில தினங்களிலேயே 50 கோடி வசூலை எட்டிய நிலையில், தற்போது 2 வாரத்திற்கு முன்பாகவே சுமார் 100 கோடி வசூல் செய்துள்ளதை அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது படக்குழு.
எழுத்தாளர் பென்யாமின் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு பிளெஸ்ஸி இயக்கியுள்ளார். சுனில் கே.எஸ் ஒளிப்பதிவும், ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பும் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்தன. பிருத்விராஜ் சுகுமாரன், அமலா பால், ஜிம்மி ஜீன் லூயிஸ், கேஆர் கோகுல், தலிப் அல் பலுஷி மற்றும் ரிக் ஆகியோர் நடித்துள்ளனர். ’ஆடுஜீவிதம்’ திரைப்படத்தை விஷுவல் ரொமான்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Desingu Periyasamy: இயக்குனர் தேசிங்கு பெரியசாமியிடம் பண மோசடி! காவல் நிலையத்தில் பரபரப்பு புகார்.!