2014-15 Vs 2024-25 இடைக்கால பட்ஜெட்: என்ன வித்தியாசம்? வளர்ந்த இந்தியா எப்படி சாத்தியமானது?
2014-15 மற்றும் 2024-25 இடைக்கால பட்ஜெட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
Modi sonia
சோனியா காந்தி தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, தனது 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு 2014-15ல் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தது. அதன்பிறகு, மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு 10 ஆண்டுகால ஆட்சிக்குப் பிறகு 2024-25ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. இந்த இரண்டு இடைக்கால பட்ஜெட்டுகளுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் குறித்து தற்போது பார்க்கலாம்...
Modi_sonia
10 ஆண்டுகால ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு நேர்மையைற்ற முறையில் செயல்பட்டதால், தனது நற்பெயரைக் காக்க வஞ்சக வழிகளைக் கையாண்டது. ஆனால் அதே நேரம் 10 ஆண்டுகால தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இந்தியாவை உலகின் சிறந்த பொருளாதாரமாக மாற்றியது.
இந்த இரண்டு வரவு செலவுத் திட்டங்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை விரிவாகப் பார்க்கலாம்.
Interim Budgets
1) பிப்ரவரி 2014 இடைக்கால பட்ஜெட் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது இருந்த பற்றாக்குறையை செயற்கையாகக் குறைப்பதற்காக 2013-14 ஆம் ஆண்டுக்கான எண்ணெய் மற்றும் உரங்கள் (35,000 கோடி) மீதான மானியங்களை நேர்மையற்ற முறையில் அடுத்த ஆண்டுக்குத் தள்ளப்பட்டது. இது இந்த நிறுவனங்களின் பணப்புழக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது, வளர்ச்சியை அழித்தது.
2) பற்றாக்குறையை பராமரிக்க திட்டமிட்ட செலவு மீண்டும் குறைக்கப்பட்டது. இது ரூ. 80,000 கோடி. இதன் விளைவாக, உற்பத்தி முதலீடு லாபம் இல்லாத நிலையை எட்டியுள்ளது.
Interim Budgets
3) இன்ஃப்ரா மற்றும் பிற நிறுவனங்களுக்கு செலுத்த வேண்டிய பணம் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக வளர்ச்சி தடை ஏற்பட்டது..
4) 2005 மற்றும் 2014 க்கு இடையில், அரசாங்க மூலதனச் செலவு 23% இலிருந்து 14% ஆகக் குறைந்தது. இந்த ஆண்டுகளில் வேலையின்மை அதிகரித்ததில் பெரிய ஆச்சரியம் அல்ல.
Interim Budgets
என்டிஏ அரசு தனது 10 ஆண்டு கால ஆட்சியை வளர்ச்சி, உயர் வேலை வாய்ப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகிய ஆண்டாக மாற்றியுள்ளது. இந்த 10 ஆண்டுகள் யுபிஏ ஆட்சியில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டுள்ளது.
Interim Budgets
யுபிஏ அரசாங்கம் உயர் வளர்ச்சியை அழித்துவிட்ட நிலையில். வேலை வாய்ப்புகளை உருவாக்க முடியவில்லை. அதே நேரம் இந்த 10 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் பொருளாதார நிர்வாகம் மிகவும் சிறப்பாக இருந்துள்ளது..
பிரதமரே சொன்னது போல் - "நாங்கள் "இனிமையான இடத்தில்" இருக்கிறோம். சோனியா காந்தி / மன்மோகன் சிங் ஆட்சியின் 10 ஆண்டு யுபிஏ உடன் ஒப்பிடும் போது, மோடி இந்தியாவை வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்கிறார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.