Kshama Bindu: இந்தியாவில் முதல் முறை, தன்னை தானே திருமணம் செய்து கொண்ட இளம்பெண்...இதுல ஹனிமூன் வேறயா? ஆத்தாடி
Gujarat woman Kshama Bindu: குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே ஜூன் 11ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
Shama Bindu
இணையத்தில் ஏராளமான விஷயங்கள் கொட்டி கிடக்கின்றனர். உலகின் எங்கோ ஒரு மூலையில், சில விசித்திரமான, வேடிக்கையான நிகழ்வுகள் ஆங்காங்கே அரங்கேறிக்கொண்டு தான் இருக்கின்றனர். அவை, சில சமயம் நம்மை, மகிழ்ச்சி அடைய செய்யும். சில விஷயங்களை வேடிக்கையாக கடந்து செல்வோம். சில விஷயங்கள் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும். அப்படியாக ஒரு விஷயம் தற்போது இந்தியாவில் அரங்கேறியுள்ளது.
Shama Bindu
ஆம், குஜராத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னைத்தானே ஜூன் 11ஆம் தேதி திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்து பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். பொதுவாக, வெளிநாடுகளில், ஏன் தன்னைத்தானே திருமணம் செய்து கொண்டவர் என்ற செய்திகளையும் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அவை எங்கோ வெளிநாடுகளில் நடக்கின்றன. இந்தியாவில் இதெல்லாம் நடக்குமா என்று நினைத்திருக்கலாம். ஆனால் அது இந்தியாவிலும் அரங்கேற இருப்பது பலருக்கும் வியப்பை தருகிறது.
Shama Bindu
குஜராத்தில் உள்ள பரோடா பகுதியைச் சேர்ந்தவர் ஷாமா பிந்து (24 ) எம்.எஸ். பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி பட்டம் பெற்றுள்ளார். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஷாமாவும் மற்ற இந்திய பெண்களைப் போலவே ஜூன் 11ஆம் தேதி நடைபெறவுள்ள தன்னுடைய திருமணத்துக்கும் தயாராகி வருகிறார்.
Shama Bindu
இவர் திருமணம் செய்துகொள்ளப் போவது மட்டுமன்றி ஹனிமூனிற்கு கோவா செல்லவும் திட்டமிட்டுள்ளார். இந்த திருமண நிகழ்விற்கு உறவினர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார். ஜூன் 9 ஆம் தேதி மெஹந்தி நிகழ்ச்சியும், ஜூன் 11 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ஐயரின் முன்னிலையில், அனைவரின் ஆசிர்வாதத்தோடு கோவிலில் நடக்கவிருக்கிறது.
இதுகுறித்து ஷாமா பிந்து கூறும்போது, நான் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை. ஆனால் நான் மணமகள் ஆக விரும்பினேன். அதனால் நானே திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ''இந்தியாவில் இதற்கு முன்னர் யாராவது இதுபோல சுய திருமணம் செய்துகொண்டார்களா? என்பதை இணையத்தில் தேடினேன். அப்படி ஒரு சம்பவம் நடக்கவில்லை என்று நினைக்கிறேன். ஆகவே இந்தியாவில் முதல் சுய திருமணம் என்னுடையதாகத்தான் இருக்கும்" என்றார்.
மேலும், அனைவரும் முதலில் தன்னை தானே நேசிக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்கிறார். தற்போது இந்த செய்தி இணையத்தில் செம்ம வைரலாக பரவி வருகிறது.