- Home
- Cinema
- Ranabaali : ஜெயிலர் 2 வசூலுக்கு வேட்டு வைக்க வரும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடியின் ‘ரணபலி’..!
Ranabaali : ஜெயிலர் 2 வசூலுக்கு வேட்டு வைக்க வரும் ராஷ்மிகா - விஜய் தேவரகொண்டா ஜோடியின் ‘ரணபலி’..!
Ranabaali vs Jailer 2 : விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகா மந்தனாவும் திருமணத்திற்குப் பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள 'ரணபலி' படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் ஜெயிலர் 2-வுக்கு போட்டியாக ரிலீஸ் ஆக உள்ளது.

Ranabaali vs Jailer 2
விஜய் தேவரகொண்டாவும், நேஷனல் க்ரஷ் ராஷ்மிகா மந்தனாவும் நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோடியாக நடித்துள்ள படம் 'ரணபலி'. 'டியர் காம்ரேட்' படத்திற்குப் பிறகு இவர்கள் ஜோடி சேரும் படம் இது. திருமணத்திற்குப் பிறகு இவர்கள் சேர்ந்து நடிக்கும் முதல் படம் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. ராகுல் சங்க்ரித்யன் இயக்கும் இந்தப் படம், செப்டம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது, ஆனால் இப்போது ரிலீஸ் தேதி திடீரென தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 3 தான் ரணபலியா? விஜய் தேவரகொண்டா படத்திற்கு வந்த புது சிக்கல்...!
ரணபலி புது ரிலீஸ் தேதி
'ரணபலி' படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. தசரா பண்டிகையை முன்னிட்டு, அக்டோபர் 16-ம் தேதி படத்தை ரிலீஸ் செய்வதாக அறிவித்துள்ளனர். தசராவுக்கு தொடர் விடுமுறை நாட்கள் வருவது படத்திற்கு சாதகமாக அமையும். படம் ஹிட்டானால், அது விஜய் தேவரகொண்டாவுக்கு உண்மையான பண்டிகையாக இருக்கும். இந்த அறிவிப்புடன் வெளியான புதிய போஸ்டரில், விஜய் தேவரகொண்டா பெரிய அரிவாளுடன் ஆக்ரோஷமாக காட்சியளிக்கிறார்.
ஜெயிலர் 2 உடன் மோதல்
இப்படம் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தான் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் திரைக்கு வர உள்ளது. ரணபலியை போல் ஜெயிலர் 2 படமும் பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது. ரணபலிக்கு பான் இந்தியா அளவில் எதிர்பார்ப்பு உள்ளதால், அப்படத்தின் வெளியீட்டால், ஜெயிலர் 2 படத்தின் வசூல், தெலுங்கு மாநிலங்கள் மற்றும் வடமாநிலங்களில் பாதிக்கும் சூழல் உருவாகி உள்ளது.
ரணபலி கதை
19-ம் நூற்றாண்டு பின்னணியில், 1854 முதல் 1878 வரையிலான காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் ஒரு பிரம்மாண்டமான பான்-இந்தியா படைப்பாக உருவாகிறது. குறிப்பாக 1878-ல் நடந்த ஒரு கதையை இதில் காட்டப் போகிறார்கள். அந்த நேரத்தில், பிரிட்டிஷார் இந்தியர்களை எப்படி சித்ரவதை செய்தார்கள், உணவு கூட இல்லாமல் எப்படி சுரண்டினார்கள் என்பதைப் படத்தில் காட்டியுள்ளனர். சுதந்திரப் போராட்டத்திற்கு முந்தைய இருண்ட ரகசியங்களை இயக்குநர் ராகுல் இதில் வெளிக்கொணர முயற்சிக்கிறார்.
அநீதிக்கு எதிரான போராட்டம்
அந்த காலகட்டத்தில், பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து சுமார் 45 டிரில்லியன் டாலர்களை கொள்ளையடித்ததாகக் கூறப்படுகிறது. ஹிட்லரை விட மோசமான சர்வாதிகாரம் நடந்ததாகவும், வெறும் 40 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் பசியால் இறந்ததாகவும் சொல்லப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராக 'ரணபலி' நடத்தும் போராட்டமே படத்தின் கதை. இதில் விஜய் 'ரணபலி'யாகவும், ராஷ்மிகா 'ஜெயம்மா'வாகவும் நடிக்கின்றனர். வெளியான டைட்டில் கிளிம்ப்ஸில், விஜய் குதிரையில் வந்து ஒரு பிரிட்டிஷ் அதிகாரியை ரயில் தண்டவாளத்தில் இழுத்துச் செல்லும் காட்சி மிரட்டலாக இருந்தது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

