MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வதந்தியால் பின்னுக்கு தள்ளப்பட்ட நயன்தாரா.? உண்மை வெளியானதால் மீண்டும் கிடைத்த முதலிடம்! நிம்மதியான ரசிகர்கள்!

வதந்தியால் பின்னுக்கு தள்ளப்பட்ட நயன்தாரா.? உண்மை வெளியானதால் மீண்டும் கிடைத்த முதலிடம்! நிம்மதியான ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பிடித்துள்ள நயன்தாராவை, 'தி லெஜெண்ட்' படத்தின் நாயகி ஊர்வசி ரவுத்தலே பின்னுக்கு தள்ளிவிட்டதாக தகவல் வெளியான நிலையில், அது முற்றிலும் வதந்தி என்பது தற்போது தெரியவந்துள்ளது. 

2 Min read
manimegalai a
Published : Aug 01 2022, 04:49 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

விளம்பர படங்களில் யங் ஹீரோவை போல் ஆட்டம்... பாட்டத்துடன் தோன்றி, பிரமிக்க வைத்தவர் பிரபல தொழிலதிபர் சரவணன் அருள். இவர் விளம்பரத்தில் நடித்ததற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததால் சினிமாவில் அறிமுகமாக முடிவெடுத்தார்.
 

27

அந்த வகையில், இவரது விளம்பர படங்களை இயக்கி வந்த  இரட்டை இயக்குனர்கள், ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கத்தில் 'தி லெஜெண்ட்' என்கிற படத்தில் நடித்தார். இந்த படத்தில்  நடிகர் விஜயகுமார், பிரபு, மயில்சாமி, யோகிபாபு, விவேக், ரோபோ சங்கர் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

மேலும் செய்திகள்: ஓவர் கிளாமரில்... முன்னழகு... பின்னழகை என மொத்தத்தையும் காட்டி மூச்சு முட்ட வைத்த ஜான்வி கபூர்! 

37

 5 மொழிகளில் பான் இந்தியா படமாக உருவான இந்த படத்தில் சரவணன் அருளுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலே  நடித்திருந்தார். ஜூலை 28-ந் தேதி உலகம் முழுவதும், 2500 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட இப்படம் வெளியானது முதல் கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. 
 

47

அனைத்து  தரப்பினரையும் கதையும், சரவணன் அருளின் கதாபாத்திரமும் கவரவில்லை என்றாலும், படத்திற்கு பல கோடி  பணத்தை ஒரு தயாரிப்பாளராகவும் வாரி இறைத்துள்ளார் சரவணன் அருள் என ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: 'திருச்சிற்றம்பலம்' இசை வெளியீட்டு விழாவிற்கு வீல் சேரில் வந்த நித்யா மேனன்..! இது தான் காரணமாம்..?
 

57

அதே போல் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுத்தலேவுக்கு சம்பளமாக 20 கோடி வழங்கப்பட்டதாக தகவல் வெளியானது. எனவே அதிக பட்சமாக தென்னிந்திய திரையுலகில் நடிகை நயன்தாரா 10 கோடி வரை சம்பளமாக பெற்று வரும் நிலையில், அவரை மிஞ்சும் விதத்தில் இரண்டு மடங்கு ஊர்வசி சம்பளம் வாங்கினார் என்றும் தகவல்கள் பரவியது.

67

எனவே, அதிக சம்பளம் பெரும் தமிழ் நடிகை பட்டியலில் இருந்து நயன்தாரா பின்னுக்கு தள்ளப்பட்டு வைத்ததாகவும், அந்த இடத்தை ஊர்வசி கைப்பற்றியதாகவும் கூறப்பட்டது. 

மேலும் செய்திகள்: ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் புறக்கணிக்க பட்ட தெருக்குரல் அறிவு! குமுறல் பதிவால் மீண்டும் வெடித்த சர்ச்சை!
 

77

இந்நிலையில் ஊர்வசி ரவுத்தலே தரப்பினர் இப்படி பரவி வரும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும், 20 கோடி சம்பளம் வாங்க வில்லை, 10 கோடிக்கும் குறைவான கணிசமான தொகையை ஊர்வசி ரவுத்தலே சம்பளமாக பெற்றதாக கூறப்பட்டுள்ளது. இந்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதால், மீண்டும் நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகை என்கிற முதல் இடத்தை கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved