Naga chaitanya : சமந்தாவை இன்னும் விவாகரத்து செய்யவில்லை.... புது குண்டை தூக்கிபோட்ட நாக சைதன்யா
Naga chaitanya : நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
நடிகர் நாகார்ஜுனாவின் மகனும், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவருமான நாக சைதன்யா, கடந்த 2017-ம் ஆண்டு நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்கு பின்னர் இருவரும் சினிமாவில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்தனர். 4 ஆண்டுகள் சுமூகமாக சென்ற இவர்களது திருமண வாழ்க்கை, கடந்த ஆண்டு முடிவுக்கு வந்தது.
இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்தாண்டு அக்டோபர் மாதம் இருவரும் பிரியப் போவதாக இன்ஸ்டாகிராம் பதிவு மூலம் அறிவித்தனர். இதன்பின் இருவருமே சினிமாவில் கவனம் செலுத்த தொடங்கினர். விவாகரத்துக்கு பின் இருவரது சினிமா கெரியரும் ஏற்றம் கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே நடிகர் நாகசைதன்யா இரண்டாவது திருமணத்துக்கு தயாராகி வருவதாகவும், அவருக்கு குடும்பத்தினர் பெண் பார்த்து வருவதாகவும் கூறப்பட்டது. மேலும் மணப்பெண் நடிகையாக இருக்கக் கூடாது என்கிற நிபந்தனையை நாகசைதன்யா விதித்துள்ளதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இந்நிலையில் அதுகுறித்து நடிகர் நாகசைதன்யா தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, தானும், சமந்தாவும் சட்டப்பூர்வமாக இன்னும் விவாகரத்து பெறவில்லை எனக் கூறியுள்ள அவர், அதற்கு 2-வது திருமணம் செய்துகொள்ள இருப்பதாக பரவி வரும் தகவல் வருத்தமளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் இதுபோன்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன்மூலம் இரண்டாவது திருமணம் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் நாக சைதன்யா.
இதையும் படியுங்கள்... Radhika Sarathkumar : இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் சாதனை விருது பெற்று கெத்து காட்டிய ராதிகா