MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மறைந்தாலும் மக்கள் மனதில் உலா வரும் உன்னத கலைஞன்... கவிஞர் கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ

மறைந்தாலும் மக்கள் மனதில் உலா வரும் உன்னத கலைஞன்... கவிஞர் கண்ணதாசன் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ

கவிஞன் கண்ணதாசன் அவர்களின் நினைவு தினமான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்.

2 Min read
Ganesh A
Published : Oct 17 2022, 01:01 PM IST| Updated : Oct 17 2022, 01:05 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

வாழும்போது வரலாறு படைத்துக்கொண்டிருக்கும் மாமனிதர்கள் இறந்த பின் மரணத்தையும் வென்று, மக்கள் மனதில் ஈரமான நினைவுகளாக தினம் தினம் உலா வந்துகொண்டிருக்கின்றனர். அப்படி உலா வந்துகொண்டிருக்கின்ற உன்னத கவிஞன் தான் கண்ணதாசன். காலம்கடந்தும் மறக்க முடியாத பல பாடல்களைக் கொடுத்து, மக்களின் உணர்வுகளோடு கலந்துவிட்ட கண்ணதாசனின் நினைவு நாளான இன்று அவரைப் பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சிவகங்கை மாவட்டம் சிறுகூடல் பட்டியில் பிறந்தவர் கண்ணதாசன். இவரது இயற்பெயர் முத்தையா. சாத்தப்பனார் - விசாலாட்சி தம்பதிக்கு 8-வது பிள்ளையாக பிறந்தார் கண்ணதாசன். தன் திறமையை வளர்த்துக்கொள்ள திரைப்படங்கள் தான் சிறந்தது என முடிவு செய்த கண்ணதாசன், திரைப்பட வாய்ப்புகளை தேடிப் போனார். 

24

வாய்ப்பு தேடிப்போன அவருக்கு பல அவமானங்களையும், அனுபவங்களையும் கண்ணதாசனுக்கு கற்றுக்கொடுத்தது திரைத்துறை. ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரித்த கன்னியின் காதலி என்கிற திரைப்படத்தில் இடம்பெறும் ‘கலங்காதிரு மனமே உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்கிற பாடல் தான் கண்ணதாசன் எழுதிய முதல் பாடலாகும். முதல் பாடலிலேயே உடைந்துபோன உள்ளங்களுக்கான ஆறுதலான வரிகள் மற்றும் பிரிவின் துயரத்தை பேசியிருந்தது இந்த பாடல்.

இதையும் படியுங்கள்... நேத்து டூப் போட்டு ஏமாத்திட்டாங்க... ஆனா இன்னைக்கு...! அஜித்தின் மாஸ் எண்ட்ரியால் அதிர்ந்த சென்னை ஏர்போர்ட்

34

கண்ணதாசனும், இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் கூட்டணி சேர்ந்தாலே அந்த பாடல் ஹிட் என சொல்லும் அளவுக்கு இவர்கள் இருவரும் கூட்டணியில் வெளியான பாடல்கள் அனைத்தும் காலம் கடந்து கொண்டாடப்படுகின்றன. இளமை ததும்பும் காதல் பாடல்களாக இருந்தாலும் சரி, இதயம் உருகும் சோகப் பாடல்களாக இருந்தாலும் சரி இவர்கள் இருவரின் காம்போவில் வந்தாலே அப்பாடல்களுக்கு தனி மவுசு உண்டு. 

44

இவ்வாறு தமிழர்களின் உணர்வுகளில் கவிதையாக கலந்துவிட்ட கண்ணதாசன், உடல்நலக்குறைவு காரணமாக 1981-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17-ந் தேதி அமெரிக்காவின் சிக்காகோ நகரில் உயிரிழந்தார். மறைந்தாலும் தன் பாடல் வரிகளால் மக்கள் மனதில் என்றும் நீங்கா இடம்பிடித்திருக்கும் கண்ணதாசன் ஒரு மகா கவிஞன் என்பதற்கு அவர் எழுதிய பாடல்களே சாட்சி.

இதையும் படியுங்கள்...  அரண்மனையில் ஆடம்பரமாக நடக்க உள்ள ஹன்சிகாவின் திருமணம்... தடபுடலாக நடக்கும் ஏற்பாடு..! மாப்ள யார் தெரியுமா?

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved