காங்கிஸ் மூலம் அரசியலில் எண்ட்ரி கொடுக்கப்போகிறாரா திரிஷா..? அவரே சொன்ன ‘நச்‘ விளக்கம்
Trisha : நடிகை திரிஷா விரைவில் அரசியலில் நுழைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்த நிலையில், அதுகுறித்து அவரே விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளாக சக்சஸ்புல் ஹீரோயினாக வலம் வரும் திரிஷா, இன்றளவும் ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார். தற்போது மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் திரிஷா. இப்படம் வருகிற செப்டம்பர் 31-ந் தேதி ரிலீசாக உள்ளதால், அதற்கான புரமோஷன் பணிகளிலும் பிசியாக உள்ளார் திரிஷா.
இதனிடையே நடிகை திரிஷா விரைவில் அரசியலில் நுழைய உள்ளதாக கடந்த சில தினங்களாக செய்திகள் பரவி வந்தன. அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தனது அரசியல் பயணத்தை தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது. நடிகை நக்மா காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருப்பதாகவும், அவருக்கு பதில் நடிகை திரிஷாவை கட்சியில் சேர சொல்லி காங்கிரஸ் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் பேச்சு அடிபட்டது.
இதையும் படியுங்கள்... 'கோப்ரா' ப்ரோமோஷனுக்கு திருச்சி சென்ற விக்ரம் - ஸ்ரீநிதி ஷெட்டி! இணையத்தை கலக்கும் ஏர்போர்ட் போட்டோஸ்!
இதையடுத்து சமீபத்தில் இதுகுறித்து கிங்கிராஸ் கட்சியைச் சேர்ந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இதுகுறித்து அளித்த விளக்கத்தில், நடிகை திரிஷாவுக்கு காங்கிரஸ் சார்பில் எந்தவித அழைப்பும் விடுக்கப்படவில்லை என உறுதிபட தெரிவித்தார். தங்களது கொள்கையை ஏற்றுக்கொண்டு திரிஷா வந்தால் வரவேற்போம் என்றும் அவர் கூறி இருந்தார்.
இந்நிலையில், இதுகுறித்து நடிகை திரிஷாவே விளக்கம் அளித்துள்ளார். தான் அரசியலில் நுழைய இருப்பதாக பரவும் தகவல் துளியும் உண்மையில்லை. இந்த செய்தி எப்படி பரவியதென்று எனக்கே தெரியவில்லை. அரசியலில் சேரும் எண்ணம் தனக்கு இல்லவே இல்லை என்று கூறி தன்னைப்பற்றிய அரசியல் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் திரிஷா.
இதையும் படியுங்கள்... பாலியல் சீண்டல்கள் எனக்கும் நடந்திருக்கு.. ஆண்கள் மட்டுமல்ல பெண்களும்தான் இதற்கு காரணம்- விஜயலட்சுமி ஓபன் டாக்