MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கழற்றி வைத்த இதயத்தை அணியுங்கள்! காசாவை பார்த்து கதறும் வைரமுத்து!

கழற்றி வைத்த இதயத்தை அணியுங்கள்! காசாவை பார்த்து கதறும் வைரமுத்து!

பாடலாசிரியர் வைரமுத்து, காசாவில் நடக்கும் இன அழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து தனது எக்ஸ் பக்கத்தில் உருக்கமான கவிதை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

1 Min read
SG Balan
Published : Sep 21 2025, 12:45 PM IST| Updated : Sep 21 2025, 12:46 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
காசா குறித்து வைரமுத்து கவிதை
Image Credit : Asianet News

காசா குறித்து வைரமுத்து கவிதை

பாடலாசிரியர் வைரமுத்து, இஸ்ரேல்-பாலஸ்தீனம் மோதல் குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் உருக்கமான கவிதையை வெளியிட்டுள்ளார். இந்தக் கவிதையில், காசாவில் நடக்கும் இன அழிப்பு மற்றும் மனிதாபிமானமற்ற செயல்களைக் கண்டித்து, உடனடியாக போர் நிறுத்தப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

24
இஸ்ரேல் எங்கிருக்கிறது?
Image Credit : Google

இஸ்ரேல் எங்கிருக்கிறது?

'இஸ்ரேல் எங்கிருக்கிறது? தெரிய வேண்டியதில்லை, ஓர் இனத்தை அழிக்கிறது என்று தெரிந்தால் போதும்' என்று தொடங்கும் இந்தக் கவிதை, உலக வரைபடத்தில் பாலஸ்தீனம் 'இருந்தும் இல்லாமல் இருக்கிறது' என்ற வேதனையான உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது.

கவிதை மேலும், 65,000 மனித உயிர்கள் பறிக்கப்பட்டு, பஞ்சம் காரணமாக மனித மாமிசம் உண்ணும் அவலநிலை ஏற்பட்டிருப்பதாகவும், 'முளைக்குச்சியில் குத்திவைக்கப்பட்ட மண்டை ஓடுகளாய் குழந்தைகள்' என காசாவின் கோரமான நிலையை விவரிக்கிறது.

Related Articles

Related image1
காசா போர்! இஸ்ரேலுக்கு எதிராக கொந்தளித்த சத்யராஜ், வெற்றிமாறன், அமீர்! மோடி, டிரம்புக்கும் கண்டனம்!
Related image2
ஏ.ஆர்.ரகுமான் - வைரமுத்து இடையே வெடித்த சண்டையில் உருவான எவர்கிரீன் ஹிட் பாடல் பற்றி தெரியுமா?
34
ஐ.நா.விற்கு வைரமுத்து வேண்டுகோள்
Image Credit : X/vairamuthu

ஐ.நா.விற்கு வைரமுத்து வேண்டுகோள்

இந்தத் துயரங்களைக் கண்டு மனம் பதறியதாகவும், பாலைவனத்து மணலை வாயில்போட்டு மெல்லும் ஒரு சிறுவனின் காட்சியைக் கண்டு தன்னால் தாங்க முடியவில்லை என்றும் வைரமுத்து குறிப்பிட்டுள்ளார்.

'இந்த இனத் துயரம் முடிய வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ள வைரமுத்து, ஐ.நா.வின் எண்பதாவது அமர்வில் இந்த 'நிர்மூலம்' நிறுத்தப்பட வேண்டும் என்றும், இதற்கு உலக நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார். குறிப்பாக, அமெரிக்கா தனது 'வீட்டோ அதிகாரத்திற்கு விடுமுறை விடவேண்டும்' என வெளிப்படையாகக் கோரிக்கை விடுத்துள்ளார்.

44
ஈரல் நடுங்கும் மனிதனின் ஈரக் குரல்
Image Credit : Twitter

ஈரல் நடுங்கும் மனிதனின் ஈரக் குரல்

இறுதியாக, இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை குறிப்பிட்டு, "கழற்றிவைத்த இதயத்தை எடுத்து இருந்த இடத்தில் அணிந்துகொள்ளுங்கள்" என்று கூறியுள்ள கவிஞர், இது "இந்தியாவின் தெற்கிலிருந்து ஈரல் நடுங்கும் ஒரு மனிதனின் ஈரக் குரல்" என்று தன் கவிதையை முடித்துள்ளார்.

இஸ்ரேல் எங்கிருக்கிறது?
தெரிய வேண்டியதில்லை
அது இருக்கிறது
என்று தெரிந்தால் போதும்;
ஓர் இனத்தை அழிக்கிறது
என்று தெரிந்தால் போதும்

உலகப்படத்தில்
பாலஸ்தீனம் எங்கிருக்கிறது?
தெரியவேண்டியதில்லை
அது இருந்தும்
இல்லாமல் இருக்கிறது என்று
தெரிந்தால் போதும்

65ஆயிரம் மனிதர்களின்
உடல்… pic.twitter.com/4fO84nIGYp

— வைரமுத்து (@Vairamuthu) September 21, 2025

About the Author

SB
SG Balan
முதுகலை பட்டதாரி. டிஜிட்டலுக்கு செய்தி எழுதுவதில் 6 ஆண்டுகள் அனுபவம் கொண்டவர். கடந்த 2 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் உதவி ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். வணிகம், தொழில்நுட்பம், கல்வி, அரசியல் செய்திகளில் ஆர்வமுள்ளவர். இதற்கு முன்பு டைம்ஸ் இன்டர்நெட்டில் பணிபுரிந்தார்.
இந்தியா
உலகம்
சினிமா
காசா
இசுரேல்
பாலஸ்தீனம்
ஹமாஸ்

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved