சானியா மிர்சா சோயிப் மாலிக் விவாகரத்தா? பர பரப்பை கிளப்பும் சானியாவின் புதிய இன்ஸ்டாகிராம் பதிவு!!
டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா மற்றும் கிரிக்கெட் வீரரும் அவரது கணவருமான சோயிப் மாலிக் இருவரும் மிர்சா-மாலிக் என்ற பெயரிலான டாக் ஷோவுக்கு தயாராகி வருகின்றனர். இந்த நிகழ்ச்சி பாகிஸ்தான் சேனலில் உருதுஃபிக்ஸ் அபீசியல் என்ற பெயரில் ஒளிபரப்பாக இருக்கிறது.
இதற்கான படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கிவிட்டது. இருவரும் சமீபத்தில் அதற்கான செட்டில் இருந்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளனர். இன்ஸ்டாகிராமில் பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த குறும்படத்தில் சானியாவும், சோயிப்பும் செட்டில் இருக்கும்போது, அறிமுகம் செய்து கொண்டனர். ''நான் சானியா, இது மிர்சா மாலிக் ஷோ'' என்று சானியா கூற, ''நான் சோயிப்'' என்று மாலிக்கும் தங்களை அறிமுகம் செய்து கொண்டனர்.
இந்த மாத தொடக்கத்தில் இந்த நிகழ்ச்சி குறித்து இவர்கள் அறிவிப்பை வெளியிட்டு இருந்தனர். இந்த நிகழ்ச்சி உருதுஃபிக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது. பாகிஸ்தான் சேனலில் ஒளிபரப்பப்படும். இன்ஸ்டாகிராமில் சேனலின் போஸ்டர் ஒன்றையும் பகிர்ந்துள்ளனர். படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில், இந்த நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது.
சமீபத்திய பதிவில் பலரும் கருத்துக்களை வெளியிட்டு இருந்தனர். இவர்களது ரசிகர்கள் தங்களது பதிவில், "ஆம் உங்கள் நிகழ்ச்சிக்காக நாங்களும் உற்சாகமாக இருக்கிறோம்" “இருவரும் அழகாக இருக்கிறீர்கள்” என்று பதிவிட்டு, தி மிர்சா மாலிக் நிகழ்ச்சி எப்போது திரையிடப்படும் என்று கேட்டு இருந்தனர். மற்றவர்கள் இந்த தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர்.
சானியா மிர்சா சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்று பகிர்ந்து இருந்தார். மேக்கப் செய்து கொண்டே பாடுவது போன்ற வீடியோவை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். "12 மணிநேர படப்பிடிப்பு இறுதியில் முடிந்தது'' என்றும் பதிவிட்டு இருந்தார்.
சானியா மிர்சா மற்றும் சோயிப் மாலிக் இருவரும் ஏப்ரல், 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். 2018ஆம் ஆண்டில், அவர்களுக்கு மகன் பிறந்தார். அவரது பெயர் இஷான் மிர்சா மாலிக். சானியா அடிக்கடி தனது மகனுடன் இன்ஸ்டாகிராமில் வீடியோ பகிர்ந்து வருகிறார். சோயிப், சானியா இருவரும் விவாகரத்து நோக்கி செல்கின்றனர் என்ற செய்தி சமீபத்தில் தீயாக பரவி வந்தது. ஆனால், இவர்கள் தங்களது டாக் ஷோ நிகழ்ச்சி வெற்றி பெறுவதற்காக இதுபோன்ற செய்திகளை பரப்பி வருகின்றனர் என்றும் சில ஊடகங்கள் கருத்து தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், இவர்களது டாக் ஷோ விரைவில் ஒளிபரப்பப்பட இருக்கிறது.