5ம் வகுப்பு மாணவியை வகுப்பறையில் கதற விட்ட தலைமை ஆசிரியர்.. அதிர்ச்சி சம்பவம்
பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது.
தமிழகம் முழுவதும் கொலை, கொள்ளை, திருட்டு மற்றும் கற்பழிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. கற்பழிப்பு சம்பவங்களும் எல்லா இடங்களிலும் பரவலாக அதிகரித்து வருகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதும் வாடிக்கையாகிவிட்டது. வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு ஒன்றியம் அருகே தொடக்கப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்தப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பால்வண்ணன் பணியாற்றி வருகிறார்.
மேலும் செய்திகளுக்கு.."எல்லாமே ரத்து.. அதிமுகவில் வாங்க சேர்ந்து செயல்படுவோம்"- ஓபிஎஸ் திடீர் பல்டி
இவருக்கு வயது 52. இவர் ஏற்கனவே முன்பிருந்த பள்ளியில் பாலியல் குற்றச்சாட்டு புகாரில் சிக்கி நடவடிக்கைக்கு ஆளாகியுள்ளார். இந்நிலையில், சஸ்பெண்ட் ஆன பிறகு பேரணாம்பட்டுப் பள்ளிக்குத் தலைமை ஆசிரியராக பொறுப்பு வகித்த வந்த நிலையில், 5ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரிடம் நேற்று முன்தினம் மதிய இடைவேளையில், தவறாக நடந்துக்கொண்டுள்ளார். மாணவி கூச்சலிட்டு கதறி அழுதுள்ளார். ஆனாலும் விடாமல் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவ்வழியாக வந்தமற்றோரு மாணவி அதனை பார்த்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..மம்தாவை சிக்கலில் மாட்டிவிட்ட நடிகை.. கோடிக்கணக்கில் பணம் - யார் இந்த அர்பிதா முகர்ஜி ?
ஆனால் பால்வண்ணன் அந்த மாணவியை மிரட்டி அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில், மிரட்டலுக்கு உள்ளான மாணவி, தலைமை ஆசிரியரின் பாலியல் அத்துமீரலை பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் சிறுமியின் பெற்றோர் அளித்தப்புகாரின் பேரில், வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு போலிஸார் பால்வண்ணம் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெறுவது பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகளுக்கு..பள்ளியில் மயங்கி விழுந்த ஸ்ரீமதி.. பரபரப்பான சிசிடிவி காட்சிகள் வெளியீடு !