Asianet News TamilAsianet News Tamil

டியூசன் மாணவிகளுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்.. சேட்டை செய்த பி.டி வாத்தியாரை அலேக்காக தூக்கிய போலீஸ் !

டியூசன் படிக்கும் மாணவிகளிடம் செல்போன்களை வாங்கி அவர்களுக்கு இரவு நேரத்தில் ஆபாச மெசேஜ்களை அனுப்பி ஆசிரியர் டார்ச்சர் செய்வதாக புகார்கள் எழுந்துள்ளது.

31 female students were sexually harassed by pt teacher arrest police
Author
First Published Sep 27, 2022, 4:24 PM IST

நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கத்திரிப்புலம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் அசோகன் என்பவர் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். மருதூரைச் சேர்ந்த இவர் பட்டிமன்ற பேச்சாளராகவும் உள்ளார். பள்ளிக்கு அருகிலேயே தனியாக டியூஷன் சென்டர் நடத்தி வருகிறார். ஆசிரியர் அசோகனிடம் அப்பள்ளியைச் சேர்ந்த பிளஸ் ஒன், பிளஸ் டூ மாணவிகள் டியூசன் படித்து வருகிறார்கள்.

31 female students were sexually harassed by pt teacher arrest police

இதையும் படிங்க..வீட்டு காவலில் சீனா அதிபர் ஜி ஜின்பிங்.. ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - உண்மையில் சீனாவில் என்ன நடக்கிறது ?

இந்நிலையில், டியூசன் படிக்கும் மாணவிகளுக்கு ஆசிரியர் அசோகன் வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட 18 மாணவிகள் கடந்த 21ம் தேதி பள்ளி தலைமை ஆசிரியரிடம் புகாரளித்தனர். இதையடுத்து, குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் பள்ளியில் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் ரகசிய விசாரணை நடத்தினர்.

இதையும் படிங்க..புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியின் ஆட்சி கவிழ்கிறது ? உள்ளடியில் பாஜக - அடுத்த முதல்வர் யார் ?

31 female students were sexually harassed by pt teacher arrest police

அப்போது டியூஷன் படித்த 31 மாணவிகளுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியும் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. பாதிக்கப்பட்ட மாணவிகளில் 12 பேர் கரியாப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அசோகனை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க..“திமுகவில் ஆ.ராசா முதல்வராக முடியுமா ? திமுகவை அட்டாக் செய்த வானதி சீனிவாசன் !”

Follow Us:
Download App:
  • android
  • ios