இந்நிலையில் ஊரடங்கால் வேலை இழந்து கஷ்டப்படும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் யோகிபாபு 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். 

கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் சமூக விலகல் மட்டுமே மக்களின் உயிரை காக்கும் ஒரே வழியாக உள்ளது. இதனால் ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. இதனால் திரைத்துறையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தினக்கூலி தொழிலாளர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இதையும் படிங்க: “முழுசா அவுத்துட்டு போஸ் கொடுத்திருக்கலாம்”... மோசமான உடையில் கன்றாவி போஸ் கொடுத்த மீரா மிதுன்...!

இதனால் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் கொஞ்சம் உதவினால் பெப்சி தொழிலாளர்களுக்கு கஞ்சி சோறாவது கொடுக்கலாம் என அந்த அமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி கோரிக்கை விடுத்திருந்தார். இதையடுத்து ரஜினி, சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோர் லட்சங்களை வாரி வழங்கினார். 

Scroll to load tweet…

இதையும் படிங்க: “இதைவிட குட்டை டவுசர் கிடைக்கலையா?”.... யாஷிகா ஆனந்தை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்...!

இதேபோன்று துணை நடிகர்கள் போன்றவர்களுக்கு உதவ வேண்டுமென நடிகர் சங்கமும் கோரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில் ஊரடங்கால் வேலை இழந்து கஷ்டப்படும் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு நடிகர் யோகிபாபு 1250 கிலோ அரிசி வழங்கியுள்ளார். அந்த அரிசி பைகளை வாகனம் மூலம் தென்னிந்திய நடிகர்கள் சங்க உறுப்பினர்களின் வீடுகளுக்கே கொண்டு விநியோகித்துள்ளார். பசித்த வயிற்றிற்கு உணவளித்த யோகிபாபுவை பலரும் பாராட்டி வருகின்றனர்.