Asianet News TamilAsianet News Tamil

நிறைவேறாத 50 கனவுகளோடு உயிரை விட்ட சுஷாந்த்..! என்னென்ன தெரியுமா?

சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்குள் கால் பதித்து, பல்வேறு போராட்டங்களுக்கு பின், முன்னணி நடிகராக உயர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங். அழகு, அறிவு என அணைத்தும் ஒரு சேர இருந்தும், 34 வயதில் அவர் தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.
 

sushanth sigh not fulfill 50 dreams
Author
Chennai, First Published Jun 15, 2020, 5:02 PM IST

சின்னத்திரையில் இருந்து, வெள்ளித்திரைக்குள் கால் பதித்து, பல்வேறு போராட்டங்களுக்கு பின், முன்னணி நடிகராக உயர்ந்தவர் பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங். அழகு, அறிவு என அணைத்தும் ஒரு சேர இருந்தும், 34 வயதில் அவர் தற்கொலை முடிவை கையில் எடுத்துள்ளது ரசிகர்கள் மற்றும் பிரபலங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாக உள்ளது.

மேலும் செய்திகள்: நிலவில் சொந்தமாக நிலம் வாங்கிய சுஷாந்த்...! சொத்து மதிப்பு மட்டும் இத்தனை கோடியா?
 

இவருடைய குடும்பத்தினர், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பே இல்லை என அடித்து கூறுவதால், ரசிகர்களுக்கும் இவருடைய தற்கொலை பின்னால் ஏதேனும் மர்மம் இருக்குமா என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.

sushanth sigh not fulfill 50 dreams

மேலும் போலீசார், இது குறித்து தீவிரமாக விசாரணை செய்து வருகிறார்கள். இந்நிலையில் சுஷாந்த் சிங், தன்னுடைய 50 கனவுகள் குறித்து பேப்பரில் எழுதிய தொகுப்பு வெளியாகி ரசிகர்கள் மனதையே உருக வைத்துள்ளது. இதில் இருந்து இவருடைய நல்ல மனம் வெளிப்படுவதாக ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் செய்திகள்: பத்திரமா இருங்கனு சொன்ன மகன் இன்று இல்லை! உச்ச கட்ட சோகத்தில் ஏர்போர்ட் வந்து சேர்ந்த தந்தை! புகைப்படங்கள்
 

sushanth sigh not fulfill 50 dreams 

அவரே கைப்பட எழுதிய 50 ஆசைகள் குறித்த பேப்பரில் எழுதியுள்ளதாவது, விமானத்தில் எப்படி பறக்க வேண்டும் என கற்று கொள்ள வேண்டும். இடது கையால் கிரிக்கெட் விளையாட வேண்டும், குழந்தைகள் படிப்பிற்கு உதவி செய்ய வேண்டும், டென்னிஸ் வீராங்கனையோடு டென்னிஸ் விளையாட வேண்டும், 4 கிளாப் புஷ் அப் எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: திருமணம் செய்து கொள்ளாமல் வாழும் முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போட்ட டாப் நடிகைகள்!
 

sushanth sigh not fulfill 50 dreams

தனது வாழ்நாளில் 100 குழந்தைகளையாவது தனது சொந்த செலவில் நாசாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும், செயற்கை நுண்ணறிவில் துறையில் பணியாற்ற வேண்டும், பெண்களுக்கு தற்காப்பு கலைகளை கற்றுத் தர வேண்டும், குழந்தைகளுக்கு யோகா, நடனம் உள்ளிட்டவற்றை கற்றுத் தர வேண்டும், LIGO போக வேண்டும், 10 நடன முறைகளையாவது கற்று கொள்ள வேண்டும், எரிமலை குழம்பு வெடித்து வருவதை படம் பிடிக்க வேண்டும், அண்டார்டிகா சென்று வர வேண்டும், என்றும் மிகவும் உணர்ச்சி பூர்வமாக எழுதியுள்ளார்.

மேலும் செய்திகள்: சுஷாந்தின் 6 வருட காதலிக்கு நடந்த முடிந்த நிச்சயதார்த்தம்! தற்கொலைக்கு பின் வெளியாகும் ஷாக் தகவல்!
 

sushanth sigh not fulfill 50 dreams

மேலும் விவசாயம் செய்வது எப்படி என கற்று கொள்ள வேண்டும், குழந்தைகளுக்கு டான்ஸ் சொல்லி தர வேண்டும், செஸ் சாம்பியனுடன் விளையாட வேண்டும். ஐரோப்பாவிற்கு ரயிலில் சென்று வர வேண்டும் என இவருடைய, ஆசைகள் நீண்டு கொண்டே செல்கிறது. ஆனால் இந்த ஆசைகள் அணைத்தும் நிறைவேறுவதற்குள் இவர் எடுத்திருக்கும் முடிவு தான் அனைவரையும் பேரதிர்ச்சியில் மூழ்கடித்துள்ளது. 

மேலும் செய்திகள்: சுஷாந்த் கொலை செய்யப்பட்டுள்ளார்..! தாய் மாமாவின் சந்தேகத்தால் பரபரப்பு..!
 

சுஷாந்த் சிங் மறைவு குறித்து, பேட்மிண்டன் வீராங்கனை சானியா மிர்சா கூட, பல முறை என்னுடன் விளையாட வேண்டும் என கூறி இருக்கிறாய். ஆனால் அந்த ஆசை நிறைவேறுவதற்கு முன் நீ சென்றுவிட்டாய் என்கிற பதிவை பதிவிட்டு தன்னுடைய இரங்கலை தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios