Asianet News TamilAsianet News Tamil

ரஜினியை விடாமல் துரத்தும் பெரியார்... நாளை மறுநாள் வருகிறது தீர்ப்பு... வழக்குப்பதிய உத்தரவிடப்படுமா?

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதி தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Rajinikanth Controversial Speech about Periyar case Egmore Court Will Give Verdict on March 9th
Author
Chennai, First Published Mar 7, 2020, 12:44 PM IST

கடந்த ஜனவரி 14-ஆம் தேதி துக்ளக் ஆண்டு விழாவில் பெரியார் குறித்து நடிகர் ரஜினிகாந்த் பேசிய கருத்துக்கள் சர்ச்சைக்குள்ளானது. 1971ம் ஆண்டு சேலத்தில் தந்தை பெரியார் நடத்திய பேரணியின் போது ராமர், சீதை ஆகியோரின் உடையில்லா சிலை எடுத்துச்செல்லப்பட்டதாகவும், செருப்பு மாலை அணிவிக்கப்பட்டதாகவும் பேசியிருந்தார். 

Rajinikanth Controversial Speech about Periyar case Egmore Court Will Give Verdict on March 9th

இதையும் படிங்க: தர்பாரையே தட்டித்தூக்கிய "திரெளபதி"... ஒரே வாரத்தில் இத்தனை கோடி வசூலா?

இதையடுத்து பெரியார் குறித்து பொய்யான தகவல்களை பரப்புவதாகவும், பொது அமைதியை குலைக்கும் வகையில் ரஜினிகாந்த் பேசியதாகவும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் 18ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டது.

Rajinikanth Controversial Speech about Periyar case Egmore Court Will Give Verdict on March 9th

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இதுவரை வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால் சென்னை எழும்பூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் திராவிடர் விடுதலைக் கழக மாவட்டச் செயலாளர் உமாபதி சார்பில் இரண்டாவது முறையாக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Rajinikanth Controversial Speech about Periyar case Egmore Court Will Give Verdict on March 9th

அந்த மனுவில் ரஜினி மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்க எடுக்கவேண்டுமென வலியுறுத்தப்பட்டிருந்தது. வழக்கு விசாரணையின் போது வன்முறையை தூண்டும் விதமாக பேசுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை உமாபதி தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினர். 

Rajinikanth Controversial Speech about Periyar case Egmore Court Will Give Verdict on March 9th

இதையும் படிங்க: தாயும் சேயும் நலம்... குழந்தை பிறந்ததை செம்ம ஹாப்பியாக அறிவித்த ரியோ... குவியும் வாழ்த்துக்கள்...!

மேலும் மத உணர்வை தூண்டி பெரியார் பெயருக்கு களங்கம் விளைத்து வன்முறையை தூண்ட முயண்ற ரஜினிகாந்த் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட எழும்பூர் குற்றவியல் நீதிமன்றம் வழக்கின் தீர்ப்பை மார்ச் 9ம் தேதி தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios