அவள் என்மீது படுத்தால் வாட்டர் பெட் மாதிரி இருக்கும் என திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கூறினார். புதிதாக திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியுடன் சேர்ந்து  பேட்டிக் கொடுத்த அவர் இவ்வாறு கூறினார். 

அவள் என்மீது படுத்தால் வாட்டர் பெட் மாதிரி இருக்கும் என திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திரன் சந்திரசேகர் கூறினார். புதிதாக திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமியுடன் சேர்ந்து பேட்டிக் கொடுத்த அவர் இவ்வாறு கூறினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

நயன்தாரா- விக்னேஸ் சிவன் திருமணத்திற்குப் பிறகு அதிக அளவில் பேசப்பட்ட திருமணம் ஒன்று உண்டு என்றால் அது சினிமா தயாரிப்பாளர் ரவீந்திரன், வீடியோ ஜாக்கி மகாலட்சுமி திருமணமாக தான் இருக்கும். அந்த அளவிற்கு அவர்களின் திருமணத்தை குறித்த டாக் இன்னும் சமூகவலைதளத்தில் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. சின்னத்திரையில் தொகுப்பாளினியாகவும், சீரியல் நடிகையாகவும் வலம் வந்தவர் மகாலட்சுமி, தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளார். திருமணமாகி கணவரை பிரிந்த நிலையில் அவருக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில் பல்வேறு சர்ச்சைகளில் அவர் சிக்கினார், பிரபல சீரியல் நடிகர் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாகவும் புகார் எழுந்தது, அந்த சீரியல் நடிகரின் மனைவி தற்கொலைக்கு முயன்றதை அடுத்து அவருடன் இருந்து விலகினார், பிறகு லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் தயாரிப்பில் விடியும் வரை காத்திரு எனும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார், இந்நிலையில்தான் ரவீந்தரன் உடன் காதல் ஏற்பட்டு அவரை தற்போது திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்: அடேங்கப்பா..வேற லெவல் போட்டோ சூட் நடத்தி ..ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த ஸ்ருதிஹாசன்

திருமணமானதற்கான புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வெளியானதை அடுத்து பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர். ஆனால் இன்னும் சிலர் தம்பதியரை ட்ரோல் செய்து வருகின்றனர். சந்திரசேகரை உருவ கேலி செய்து வருகின்றனர். தற்போது நடந்தது இருவருக்குமே இரண்டாவது திருமணம் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் பல தொலைக்காட்சி மற்றும் யூட்யூப் சேனல்கள் ரவீந்திரன் மகாலட்சுமி தம்பதியரை பேட்டி எடுத்து வருகின்றனர். அதில் பலர் தங்களை ட்ரோல் செய்து வருவது குறித்து ரவீந்திரன் சந்திரசேகர் சில கருத்துக்களை கூறி வருகிறார்.

இதுதொடர்பாக தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் பேட்டி கொடுத்தார், அப்போது ரவீந்திரனை கட்டிப்பிடித்து முத்தம் தர முடியுமா என மகாலட்சுமியிடம் அந்த யூடியூப் சேனல் நெறியாளர் கேட்டார், அதற்கு ரவீந்திரன் இந்த அலையே என்னால் தாங்க முடியவில்லை, என்னை கட்டிப்பிடித்து முத்தம் தர வேண்டுமா?அப்படிச் சொன்னால் மகாலட்சுமி வேண்டுமென்றே 4 ,5 டேக் போவார்.

இதையும் படியுங்கள்: ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன வரலட்சுமி ...இன்ஸ்டா ரீல்ஸ் மூலம் கவரும் நாயகி

எனக்கு ஒரு கமெண்ட் ஒன்று வந்தது, அந்த கமெண்ட் என்னவென்றால், " யோவ் நீ அவங்க மேல படுத்தா அவ்வளவுதான்யா " என்று வந்தது. ஆப்போது எனக்கு தோன்றியது என்னவென்றால், அவள் என்மீது படுத்தால் " வாட்டர் பெட் மாதிரி இருக்கும்" இதை எப்படி நான் அவளுக்கு புரிய வைப்பது, ஆனால் இதை என்னால் சொல்ல முடியாது ஆனால் இதை ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டு சொல்கிறேன்.

இதே 20 முதல் 25 வயது பையனாக இருந்திருந்தால் நான் இப்போதைய மகாலட்சுமியை கட்டிப்பிடித்து கிஸ் அடித்திருப்பேன்,ஆனால் என்னை பலர் inspiring ஆக பார்க்கிறார்கள், இந்தப் பெண்ணை நான் மனைவியாக கட்டியதற்கே என்னை இந்தளவுக்கு எழுதுகிறார்கள், இந்தப் பெண் அவர்கள் எதிரில் கிஸ் அடித்தால் அவ்வளவுதான், கிட்டதட்ட நான் சினிமா துறைக்கு வந்து 10 படங்களுக்கு மேல் ரிலீஸ் செய்து விட்டேன் ஆனால் ஒரு படம் கூட இப்படி ஓடவில்லை, எங்களது திருமண போட்டோ இணையதளத்தில் அந்த அளவுக்கு வைரலாக ஓடிக் கொண்டிருக்கிறது.