போதை பொருள் கட்டத்தில் சம்பவத்தில் மூளையாக செயல்பட்ட பிரபல தயாரிப்பாளரும், அரசியல்வாதியுமான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது இயக்குனர் அமீர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சுமார் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள, போதைப் பொருள் கடத்தலுக்கு மூளையாக செயல்பட்ட தமிழகத்தை சேர்ந்த மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இவர்களில் ஒருவர் தமிழ் திரைப்படத் தயாரிப்பாளரும், திமுக கட்சி நிர்வாகிகளில் ஒருவராக இருந்த ஜாபர் சாதிக்
என்பது தெரியவந்தது. தன்னுடைய சகோதரர்கள் மைதீன் மற்றும் சலீம் ஆகியோருடன் இணைந்து குழந்தைகளின் ஊட்ட சத்து மாவு, மசாலா பொருட்களில் அடைத்து இந்த சமூக விரோத வேளையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த தகவல் திரையுலகில் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு யாரும் நிலையில்... இந்த சம்பவம் குறித்து, இயக்குனரும், தயாரிப்பாளருமான அமீர் பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், மரியாதைக்குரிய பத்திரிகை, தொலைக்காட்சி, வலைத்தள, வலை ஒளி, வானொலி, பண்பலை மற்றும் அனைத்து ஊடக நண்பர்களுக்கு வணக்கம்.!

கடந்த இரண்டு நாட்களாக, எனது “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஜாஃபர் அவர்கள் குறித்து வரும் செய்திகள் அனைத்தும் எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த 22-ம் தேதி நான் “இறைவன் மிகப் பெரியவன்” திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்த போது, திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ஏன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது? என்னைச் சுற்றி என்ன நடக்கிறது? என்பதை ஊடகங்கள் வாயிலாகவே நான் அறிந்து கொண்டேன். உண்மை எதுவென்று இப்போது வரை எனக்குத் தெரியவில்லை.
எதுவாயினும், செய்திகளில் வரும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருக்குமேயானால், அது கண்டிக்கப்பட வேண்டியதும், தண்டிக்கப்பட வேண்டியதுமே.! நடிகர்களோடும், தயாரிப்பாளர்களோடும் சமரசங்களுக்கு உட்பட்டால் நிறைய பணம் சம்பாதிக்கலாம் என்ற கொள்கைக்கு நான் எப்போதும் எதிரானவன் என்பதை ஊடகத்துறையினர் நன்கு அறிவர்.
அந்த வகையில், சட்டவிரோதச் செயல்களில் எவர் ஈடுபட்டிருந்தாலும், அவர்களுடன் நான் தொடர்ந்து பணியாற்றப் போவதில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். தற்போதும், நான் பத்திரிகையாளர்களை வழக்கமாகச் சந்திக்கும் எனது அலுவலகத்தில் திரைப்பட பணிகளில் ஈடுபட்டிருக்கிறேன். முழுவிபரங்கள் தெரிந்த பிறகு, விரைவில் பத்திரிகை மற்றும் ஊடக துறையினரைச் சந்திக்கின்றேன். எனதெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
