குடி போதையில் ஆண் நண்பருடன் ராங் ரூட்டில் வந்து விபத்தை ஏற்படுத்திய எதிர்நீச்சல் மதுமிதா! பரபரக்கும் விசாரணை!
'எதிர்நீச்சல்' சீரியலில் நடித்து வரும் நாயகி மதுமிதா, குடிபோதையில் கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. இந்த தொடரில் ஜனனி என்கிற கதாபாத்திரத்தில் லீடு ரோலில் நடித்து வருபவர் மதுமிதா. கன்னட சீரியலில் அறிமுகமான மதுமிதாவுக்கு அங்கு எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து தெலுங்கில், இவர் நடித்த சீரியல் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து, தமிழில் 'எதிர்நீச்சல்' சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.
இந்த சீரியலில் மூலம் பட்டி தொட்டியெங்கும் பிரபலமான மதுமிதாவுக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக சமூக வலைதளத்தில் இவர் எந்த ஒரு புகைப்படத்தை பதிவிட்டாலும், அதற்கு லைக்குகளை லட்சக்கணக்கில் குவித்து வருகின்றனர் ரசிகர்கள்.
இது ஒருபுறம் இருக்க, தற்போது இவர் தன்னுடைய ஆண் நண்பருடன் செம்ம போதையில்... அதுவும் ராங் ரூட்டில் வந்து, எதிரே டூ வீலரில் வந்த போலீஸ்காரர் வண்டியில் மோதி விபத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம் பேசு பொருளாக மாறி உள்ளது.
ethirneechal
மேலும் இந்த சம்பவம் குறித்து வெளியாகி உள்ள தகவலில், இந்த விபத்து சோழிங்கநல்லூர் பக்கத்தில் இருக்கும் இடத்தில் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. அங்குள்ள ஒரு வழி பாதையில் அதுவும் ராங் ரூட்டில் தன்னுடைய ஆண் நண்பருடன் மதுமிதா வந்து கொண்டிருக்கும்போது தான் இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்து ஏற்பட்ட சில நிமிடங்களிலேயே அந்த இடத்திற்கு வந்த போலீசார், அடிபட்ட போலீசை அருகே உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து மதுமிதாவையும் அவருடைய நண்பரையும் ஸ்டேஷனுக்கு அழைத்து போய் விசாரித்ததாகவும் கூறப்படுகிறது. இதற்க்கு ராங் ரூட்டில் வந்த எங்கள் மீது தப்பு இல்லை... எதிரே வந்த போலீஸ் தான் வேகமாக வந்து காரில் மோதினார் என சப்ப கட்டு கட்டியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து நடந்து இரண்டு நாட்கள் ஆகியும் மதுமிதா தரப்பில் இந்த விஷயம் வெளியே போகாமல் பார்த்து கொள்கிறார்களாம்.
அரசால் புரசலாக கேள்வி பட்டு, மதுமிதாவுக்கு யாரேனும் போன் போட்டு இந்த விபத்து குறித்து விசாரித்தால் கூட, 'ஆமாம் அது ஒரு சின்ன ஆக்சிடென்ட்... என் நண்பர் பண்ணிட்டாரு. பெருசா இதுல பேச எதுவும் இல்லை என படக் என போனை கட் செய்து விடுகிறாராம். இந்த விஷயம் தான் தற்போது காட்டு தீ போல் சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.