ஹீரோவாக அவதாரம் எடுக்கும் 'குக் வித் கோமாளி' தொகுப்பாளர் ரக்ஷன்..! துவங்கியது படப்பிடிப்பு..!
ஏற்கனவே துல்கர் சல்மானுக்கு நண்பனாக ரக்ஷன் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்துள்ள நிலையில், தற்போது ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது.
கண்ணும் கண்ணும் கொள்ளைடித்தால் படத்தில் தனது தனித்த, நகைச்சுவை நடிப்பு திறமையால் அனைவரையும் கவர்ந்த நடிகர் ரக்ஷன், நாயகனாக புதிய படத்தில் அறிமுகமாகிறார். உணர்வுபூர்மான காதல், நட்பு, உறவுகளை மையமாக கொண்டு, அனைவரும் ரசிக்கும் கமர்ஷியல் பொழுது போக்கு திரைப்படமாக இப்படம் உருவாகிறது.
கலக்கபோவது யாரு தீனா, விஷாகா திமான், பிராங்க்ஸ்டர் ராகுல், மற்றும் பலர் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு, மலையாளத்தின் பிரபல இசையமைப்பாளர் சச்சின் வாரியர் இசையமைக்கிறார். தாமரை பாடல்வரிகளை எழுதுகிறார். கோபி துரைசாமி ஒளிப்பதிவு செய்ய, ‘அர்ஜூன் ரெட்டி’ படப்புகழ் செஷாங் மாலி படத்தொகுப்பு பணிகளை செய்கிறார்.
மேலும் செய்திகள்: அமீரை கட்டி அணைத்து... எமோஷனல் பதிவுடன் காதலை உறுதி செய்த பாவனி!
இப்படத்தின் படப்பிடிப்பு, கன்னியாகுமரி மாவட்டத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக், டீசர் குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக இருக்கிறது. பிலியா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் குவியம் மீடியா ஒர்க்ஸ் இணைந்து தயாரிக்க, இரா கோ யோகேந்திரன் உள்ளார். மேலும் இந்த படம் குறித்த மற்ற தகவல்கள், விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் செய்திகள்: லலித் மோடியுடன் டேட்டிங்.. விரைவில் திருமணமா? ஒற்றை புகைப்படத்தை வெளியிட்டு உண்மையை போட்டுடைத்த சுஷ்மிதா சென்
மேலும் ஒரு நடிகராக வரவேண்டும் என்கிற எண்ணத்தில் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்து, ஏற்கனவே ஒரு படத்தில் ரக்ஷன்,நடித்திருந்தாலும் அந்த படம் பெரிதாக பேசப்படவில்லை. ஆனால் இந்தப்படம் அப்படி இல்லாமல் ரசிகர்களின் மனதை கவரும் விதத்தில், தன்னுடைய காமெடி சென்சால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் ரக்ஷன் சிரிக்க வைப்பார் என நம்பப்படுகிறது. விஜய் டிவி தொகுப்பாளராக இருந்து இன்று முன்னணி நடிகராக சிவகார்த்திகேயன் மாறியுள்ளது போல், ரக்ஷனும் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.