- Home
- Cinema
- தொலைக்காட்சி
- Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!
Karthigai Deepam : ரேவதியின் கனடா பயணத்திற்கு பின்னால் அதிர்ச்சி சதி... காப்பாற்ற ஓடும் கார்த்திக்!
Karthigai Deepam Serial 06 August 2026 Episode : கார்த்திகை தீபம் சீரியலில் ரேவதியின் கனடா பயணத்திற்கு எதிர்பாரா சிக்கல் ஏற்பட்டு உள்ளது, அதைப்பற்றி விரிவாக பார்க்கலாம்.

Karthigai Deepam Serial Today Episode
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியல் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இன்றைய எபிசோடிலும் சஸ்பென்ஸ் மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் இடம் பெறவுள்ளன. கனவில் ரேவதியை விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லும் சம்பவத்தை கண்ட கார்த்திக், அதிர்ச்சியுடன் விழித்தெழுகிறான். அந்த கனவு சாதாரணமானதல்ல என்று அவனுக்கு தோன்ற, உடனடியாக ரேவதியை தொடர்புகொண்டு அவளது நலனை விசாரிக்கிறான். ரேவதி எல்லாம் நன்றாக இருப்பதாக கூறினாலும், கார்த்திக்கின் மனதில் எழுந்த சந்தேகம் மட்டும் விலகவில்லை.
Karthigai Deepam : கனடாவுக்கு கிளம்பும் ரேவதி... சாமுண்டீஸ்வரியின் சதித்திட்டம் பலிக்குமா?
கார்த்திக்கை சந்திக்கும் ரேவதி
அடுத்த நாள் கோவிலில் இருவரும் சந்திக்கின்றனர். அப்போது கனடா செல்லவிருப்பதாக ரேவதி தெரிவித்து, தனது விமான டிக்கெட்டையும் கார்த்திக்கிடம் பகிர்கிறாள். பயணம் வெற்றிகரமாக அமைய வேண்டும் என்பதற்காக, கார்த்திக்கின் கையால் குங்குமம் வைத்து ஆசீர்வதிக்குமாறும் கேட்டுக்கொள்கிறாள். கோவிலை விட்டு வெளியேறும் போது ரேவதிக்கு திடீரென கால் தடுக்கிறது. இதை நல்ல அறிகுறியாக எடுத்துக்கொள்ளாத கார்த்திக், சிறிது நேரம் அமர்ந்து ஓய்வெடுத்த பிறகே செல்லும்படி அறிவுறுத்துகிறான். இருந்தாலும் அவனது மனதில் ஏதோ ஆபத்து நெருங்குகிறது என்ற உணர்வு நீங்கவில்லை.
கார்த்திக்கு வந்த டவுட்
இதனால் ரேவதி அனுப்பிய விமான டிக்கெட்டை மீண்டும் ஆராயும் கார்த்திக், அதில் சந்தேகம் எழுந்ததால் நேரடியாக சம்பந்தப்பட்ட பயண நிறுவனத்துக்குச் சென்று விசாரிக்கிறான். அப்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகிறது. ரேவதியிடம் இருக்கும் டிக்கெட் போலியானது என்பதோடு, இதன் பின்னணியில் சந்திரகலாவின் சூழ்ச்சி இருப்பதையும் கார்த்திக் அறிந்து கொள்கிறான்.உடனடியாக ரேவதியை எச்சரிக்க அவன் பலமுறை தொலைபேசியில் தொடர்புகொள்ள முயற்சிக்கிறான். ஆனால் ஏற்கனவே திட்டமிட்டு செயல்பட்ட சந்திரகலா, ரேவதியின் மொபைலில் கார்த்திக்கின் எண்ணை ரகசியமாக பிளாக் செய்து விடுகிறாள். இதனால் கார்த்திக்கின் எந்த அழைப்பும் ரேவதியை சென்றடையாமல் போகிறது.
பதறிப்போன கார்த்திக்
பதற்றமடைந்த கார்த்திக், மயில்வாகனத்தை தொடர்புகொண்டு நிலைமையை அறிய முயற்சிக்கிறான். ஆனால் அவர்கள் ஏற்கனவே விமான நிலையத்திற்கு புறப்பட்டுவிட்டதாக தெரிந்ததும், நேரத்துடன் போட்டியிட வேண்டிய சூழலில் சிக்கிக் கொள்கிறான். இப்போது அனைவரின் எதிர்பார்ப்பும் ஒரே கேள்வியை நோக்கி செல்கிறது. ரேவதி ஆபத்தில் சிக்குவதற்கு முன் கார்த்திக் அவளை காப்பாற்றுவானா? சந்திரகலாவின் சதி திட்டம் வெற்றியடையுமா? அல்லது கடைசி நேரத்தில் விமான நிலையத்தை அடைந்து ரேவதியின் பயணத்தை கார்த்திக் தடுத்து நிறுத்துவானா? என்பதற்கான பதில் இன்றைய எபிசோடில் தெரியவரவுள்ளது.
Karthigai Deepam : சிவனாண்டியின் ஆட்டம் ஓவர்... கோவில் நகை திருட்டில் கார்த்திக் வைத்த செக்...!

