நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தின் சிறப்பு காட்சியை திரையிட புதுச்சேரி அரசு அனுமதி அளித்துள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி உள்ளார்.

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் அக்டோபர் 19-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. அப்படத்தின் வெளியீட்டுக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், தற்போதே கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கி உள்ளன. லியோ படத்தின் அதிகாலை காட்சிக்கு அனுமதி வழங்கப்படாததை அடுத்து, அப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் கோர்ட்டும் அனுமதி தர மறுத்துவிட்டது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஆனால் 9 மணிக்கு பதில் 7 மணிக்கு முதல் காட்சியை திரையிடலாம என்பதை அரசு பரிசீலனை செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. இதனால் 7 மணி காட்சிக்கு அனுமதி கிடைக்குமா என ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். இந்த நிலையில், புதுச்சேரியில் லியோ பட சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாக ஆட்சியர் வல்லவன் கூறி இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

காலை 7 மணிக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக அவர் கூறி உள்ளதால், சென்னையில் உள்ள விஜய் ரசிகர்கள் லியோ படத்தின் FDFS பார்க்க புதுச்சேரிக்கு செல்லும் ஐடியாவில் உள்ளனர். லியோ படத்திற்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் அதிகாலை 4 மணி காட்சிகள் திரையிடப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... Leo Breaking: 'லியோ' அதிகாலை காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கு! 4 மணி காட்சிக்கு அனுமதி மறுப்பு!