Asianet News TamilAsianet News Tamil

போலீசில் புகார் கொடுத்த பாட்டி.....!!! பதிலடி கொடுத்த பாபிலோனா.....!!!

babilona against-the-grandmother
Author
First Published Dec 1, 2016, 5:38 PM IST


பிரபல கவர்ச்சி நடிகை பாபிலோனாவை ஒரு மந்திரவாதி தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும், அவருடைய பணம், நகை உள்பட சொத்துக்களை அந்த மந்திரவாதியே பறித்து கொண்டதாகவும் அவருடைய பாட்டி கிருஷ்ணகுமாரி நேற்று சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார் .
 
இந்நிலையில் இந்த புகாருக்கு பாபிலோனா மறுப்பு தெரிவித்துள்ளார். பாட்டி தனது புகாரில் கூறியுள்ள சுந்தர் மந்திரவாதி இல்லை என்றும்.

அவர் தனது கணவர் என்றும் கூறிய அவர் தனது பாட்டியின் புகாரில் துளியும் உண்மையில்லை என்றும் விளக்க மனு ஒன்றை சென்னை போலீஸ் கமிஷனருக்கு தனது கணவர் மூலம் கொடுத்துள்ளார்.

அதில் நான், திருமணத்திற்கு பிறகு சினிமாவில் நடிக்காமல் இருப்பதை பிடிக்காமல்  தனது பாட்டி ஒற்றுமையாக வாழும் தங்களை பிரிக்க இப்படி செய்கிறார் என கூறியுள்ளார்.
 
மேலும் இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய பாபிலோனாவின் கணவர்,   கடந்த 6 நாட்களுக்கு முன் தான் பாபிலோனாவுக்கு சிசேரியன் மூலம் அழகான ஆண்குழந்தை பிறந்துள்ளதாகவும்.

பாபிலோனா எனது ஆலோசனைப்படி சினிமாவில் நடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால், அவரது பாட்டிக்கு இதில் விருப்பம் இல்லை. எனவே, எங்கள் மீது போலீசில் புகார் கொடுத்து, பிரச்னையை திசைதிருப்ப முயற்சிக்கிறார்,’’ எனத் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios