குடும்பத்தை பற்றி அவதூறு பேச்சு.. கடுப்பாகி கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்த அருண் விஜய் - என்ன நடந்தது?
Actor Arun Vijay : தமிழ் திரை உலகில் 60 ஆண்டுகளுக்கும் மேலாக பயணித்து வரும் மூத்த நடிகர் தான் விஜயகுமார். இவருடைய மகன் அருண் விஜய் இப்பொது முன்னணி நாயகர்கள் பட்டியலில் உள்ளார்.
தமிழ் சினிமாவில் கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக பயணித்து வரும் விஜயகுமார் அவர்களுடைய மகன் தான் நடிகர் அருண் விஜய். தமிழ் சினிமாவில் தனது முதல் இன்னிங்ஸில் பெரிய அளவில் புகழ் பெறவில்லை என்றாலும், கடந்த 2015 ஆம் ஆண்டுக்கு பிறகு மீண்டும் முன்னணி நாயகர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார் அருண் விஜய்.
இதற்கு அவருடைய முழு உழைப்பு மட்டுமே காரணம் என்றால் அது மிகையல்ல, தொடர்ச்சியாக நல்ல பல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தன்னை மக்கள் ரசிக்கும் வண்ணம் மாற்றிக் கொண்ட அருண் விஜய்க்கு தொடர்ச்சியாக பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அண்மையில் இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள "வனங்கான்" படத்தின் டீசர் வெளியாகி, அவருடைய கடின உழைப்பை மக்கள் பாராட்டும் வண்ணம் வைரலானது.
மதுபோதையில் விமான நிலையத்தில் அலப்பறை செய்த வேல்முருகனை சுத்துபோட்ட அதிகாரிகள்
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு அவருடைய சகோதரி அனிதா விஜயகுமார் அவர்களுடைய மகளின் திருமணம் நடைபெற்றது. அது சம்பந்தமான கொண்டாட்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் அருண் விஜய் தொடர்ச்சியாக வெளியிட்டு வந்தது நாம் அனைவரும் அறிந்ததே. இப்பொது அருண் விஜய் தந்தை விஜயகுமாரின் முதல் மனைவி முத்து கண்ணு குறித்து ஒரு தனியார் youtube சேனலில் அவதூறாக பேசியது குறித்து தனது கண்டனத்தை அருண் விஜய் தெரிவித்துள்ளார்.
அந்த youtube சேனல் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் பேசிய அந்த விஷயங்கள் தனது குடும்பத்தாருக்கு மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது வழக்கறிஞர் மூலம் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் அவர் ஒரு புகார் கொடுத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.