சினிமாவை போல் சின்னத்திரை நடிகைகளுக்கும் மக்கள் மத்தியில் மவுசு அதிகம். அந்தவகையில் விஜய் டிவி சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆனவர் தான் நடிகை பவித்ரா ஜனனி. இவர் ஆபிஸ் தொடர் மூலம் சின்னத்திரையில் எண்ட்ரி கொடுத்தார். இதையடுத்து சரவணன் மீனாட்சி, ராஜா ராணி போன்ற சூப்பர் ஹிட் சீரியல்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த பவித்ரா கடந்த 2018-ம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார்.
அந்த வகையில் நடிகை பவித்ரா ஜனனி முதன்முதலில் ஹீரோயினாக நடிக்க கமிட்டான சீரியல் தான் ஈரமான ரோஜாவே. இந்த சீரியல் சுமார் 3 ஆண்டுகள் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த சீரியல் கடந்த 2021-ம் ஆண்டு முடிவுக்கு வந்தது. இதைத் தொடர்ந்து அவர் நடிப்பில் மற்றுமொரு சீரியல் தொடங்கப்பட்டது. தென்றல் வந்து என்னை தொடும் என பெயர்கொண்ட அந்த சீரியலில் அபிநயாவாக நடித்து அசத்தி இருந்தார் பவித்ரா.
இதையும் படியுங்கள்... அமுல்பேபி போல் இருந்த ஷிவானியா இது? படு ஒல்லியாகி ஆளே அடையாளம் தெரியாத அளவு மாறிட்டாங்களே..! போட்டோஸ் இதோ
சின்னத்திரையில் பேமஸ் ஆன நடிகையாக வலம் வரும் பவித்ரா ஜனனிக்கு இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட 9 லட்சம் பாலோவர்கள் உள்ளனர். தற்போது நடிகை பவித்ராவுக்கு 32 வயதாகிறது. திருமண வயதை எட்டிய பவித்ராவுக்கு அவரது பெற்றோர் வரன் பார்க்க தொடங்கிய நிலையில், தான் திருமணம் செய்துகொள்ளும் ஐடியாவில் இல்லை என்கிற தகவலை வெளியிட்டு அதிர்ச்சி கொடித்திருக்கிறார் ஜனனி.