ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!

ஆபத்தான நிலையில் அரசு பேருந்துகள்: உயிரை கையில் பிடித்துக் கொண்டு பயணம் - முதல்வரின் சொந்த ஊரில் அவலம்!

Published : May 05, 2024, 03:56 PM IST

முதல்வர் ஸ்டாலினின் சொந்த ஊரில் ஆபத்தான நிலையில் உள்ள அரசுப் பேருந்துகளில் பொதுமக்கள் பயணம் செய்யும் அவல நிலை ஏற்பட்டுள்ளது

துண்டு போட்டு கட்டி வைக்கப்பட்ட கதவு, ஆடிக்கொண்டிருக்கும் படிக்கட்டுகள், கிழிந்த இருக்கை, தலைக்கு அருகில் பிய்ந்து தொங்கும் மின் வயர் என தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு செல்லும் அரசு பேருந்துகளின் நிலை இருக்கிறது.

தஞ்சாவூரில் இருந்து திருவாரூருக்கு செல்லக்கூடிய அரசு பேருந்தின் கதவு திறந்து மூட முடியாமல் துண்டு போட்டு கட்டப்பட்டுள்ளது. இருக்கைகள் கிழிந்து தொங்குகின்றன. படிக்கட்டு தடதட தடவென ஆடிக்கொண்டே இருக்கிறது. ஜன்னல் கம்பிகள் துருப்பிடித்து ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் இருக்கைகளில் கை வைக்க பயன்படுத்தப்படும் கம்பிகளும், கயிறு கொண்டு மற்றொரு கம்பியில் இறுக்கி கட்டப்பட்டுள்ளது.

பேருந்துகளில் வெளிச்சம் வருவதற்காக லைட்டுக்களுக்கு செல்லும் மின் ஒயர்கள் அறுந்த நிலையில் பிய்ந்து தொங்கிக் கொண்டுள்ளன. பேருந்துகளில் நிற்கும் பயணிகளின் தலையை தொடும் வகையில் இந்த மின் வயர்கள் ஆபத்தான நிலையில் உள்ளன. முதல்வரின் சொந்த ஊரான திருவாரூரில் ஆபத்தான நிலையில் பயணிகள் உயிரை கையில் பிடித்தபடி அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருவது கவனம் ஈர்த்துள்ளது.

02:10நெரிசலில் சிக்கி தவித்த வாகனங்கள்; கைக்குழந்தையுடன் களத்தில் இறங்கி போக்குவரத்தை சரி செய்த காவலர்
03:20முதல்வரோட சொந்த ஊர்ல ஆஸ்பத்திரி இவ்ளோ மோசமா இருக்கு - பொதுவெளியில் அதிகாரியை அலரவிட்ட வேல்முருகன்
04:09ஆழித் தேர் திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்த நிகழ்வு விமரிசையாக நடைபெற்றது
05:48பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு
03:36நெருப்பை தாண்டி குதித்த மாடுகள்; திருவாரூர் பொங்கல் விழாவில் சுவாரசியம்
04:41மன்னார்குடியில் கல்லூரி பொங்கல் விழாவில் மாட்டு வண்டி ஓட்டியும், கும்மி அடித்தும் மாணவிகள் அசத்தல்
04:15மாட்டு வண்டி, பறையாட்டம் என பாரம்பரிய சாயலில் கலைகட்டிய பொங்கல் விழா; திருவாரூரில் கோலாகலம்
00:56திருவாரூரில் அரசுப்பேருந்து நடத்துநர் மீது கொலைவெறி தாக்குதல்; கல்லூரி மாணவர்கள் கைது
04:242 வயதில் உயிரிழந்த மகளை அம்மன் சிலையாக வடித்து கும்பாபிஷேகம் நடத்திய தந்தை; பொதுமக்கள் நெகிழ்ச்சி
Read more