Accident : நாங்குநேரி அருகே நடந்த கோர விபத்து - பைக் மீது பின்னல் வந்த கார் மோதி இருவர் உடல் நசுங்கி பலி!

Accident : நாங்குநேரி அருகே நடந்த கோர விபத்து - பைக் மீது பின்னல் வந்த கார் மோதி இருவர் உடல் நசுங்கி பலி!

Ansgar R |  
Published : May 05, 2024, 08:34 PM IST

Car and Bike Accident : நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே வாகைகுளத்தில் நான்கு வழிச்சாலையில், மோட்டார் பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில், இருவர் சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

நெல்லை மாவட்டம் நாங்குநேரிக்கும் வள்ளியூருக்கும் இடையே வாகைகுளம் நான்கு வழிச்சாலையில் மோட்டார் பைக் ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி நோக்கி வேகமாக சென்ற கார் எதிர்பாராத விதமாக ஓட்டுனர் கட்டுபாட்டை இழந்து மோட்டார் பைக் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இச்சம்பவத்தில் மோட்டார் பைக்கில் சென்ற இருவரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து நாங்குநேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டதில் முதல் கட்ட விசாரணையில் இறந்தவர்களில் ஒருவர் வள்ளியூர் அருகேயுள்ள இளையநயினார்குளத்தைச் சேர்ந்த ரத்தினசாமி (வயது 71 ) என தெரியவந்தது. இவர் திருமண புரோக்கராக வேலை பார்த்து வந்துள்ளார் என தெரிகிறது. மேலும் இறந்த மற்றொருவர் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ற விவரம் தெரியவில்லை இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

02:17நல்லகண்ணுக்கு பாரத் ரத்னா விருதை வழங்க வேண்டும் - தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை
03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி