கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!

கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!

Ansgar R |  
Published : May 05, 2024, 08:12 PM IST

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் கோடிமுனை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடனே காணப்பட்டுள்ளது.

மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடையும் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 16-பேர் கொண்ட குழு ஆன்மீக சுற்றுலாவாக கன்னியாகுமரி வந்துள்ளனர். அவர்கள் குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தை சுற்றி பார்த்து விட்டு மதிய உணவு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

அப்போது அந்த குழுவில் இருந்த மனோஜ்குமார், விசூஸ் ஆகியோர் கடற்கரைக்கு சென்று கடலில் உள்ள பாறை மீது ஏறி நின்று கடல் அலைகளை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மாயமான நிலையில் தகவல் அறிந்து வந்த மீனவர்கள் படகுகள் மூலம் தேடி படுகாயங்களுடன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இருவரையும் பொதுமக்கள் பைக் மற்றும் கார் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஆண்மீக சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

02:41மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் கண்டறியும் போலிசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்
03:41பைக்கில் வந்த இளைஞர் செய்த செயல் கழுத்தைப் பிடித்து தள்ளிய நாம் தமிழர் கட்சியினர் பரபரப்பு.
06:45குரங்கு கிடைத்த பூமாலை அதிமுக இல்லை, விமர்சனங்கள் கடுமையாக உள்ளபோது நான் விமர்சிப்பேன் - ஜெயக்குமார்
05:00பள்ளி விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை
03:16மக்களுடைய தேவைகள் என்ன என்பதை கேட்டு ...அதை வாக்குறுதியாக கொடுப்போம் ! MP கனிமொழி பேட்டி
03:49தேர்தல் நேரத்தில் வாக்குகளுக்காக பலர் காசு பணத்தை கொடுப்பார்கள் ! நயினார் நாகேந்திரன் பேச்சு
06:41நான் 2026 ல் போட்டியிட மாட்டேனா ? விஜய்யை நிற்க வைத்து கேளுங்கள் - சரத்குமார் பேட்டி
06:37கந்தன் மலை படத்தில், H.ராஜா-க்கு தகுதியே இல்ல - அமைச்சர் சேகர்பாபு
02:19எப்போதும் திமுக எதிர்ப்பு திமுக வெறுப்பு, திமுக = விஜய் எதிர்ப்பு என்ற நிலை தான் இருக்கிறது
02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்