கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!

கன்னியாகுமரி.. ராட்சத அலையில் சிக்கிய இரு சுற்றுலா பயணிகள் - பொதுமக்கள் போராடியும் இறுதியில் நேர்ந்த சோகம்!

Ansgar R |  
Published : May 05, 2024, 08:12 PM IST

Kanyakumari : கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் முட்டம் கோடிமுனை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை முதலே கடல் சீற்றத்துடனே காணப்பட்டுள்ளது.

மேலும் கடல் சீற்றம் காரணமாக மீனவர்கள் கடலுக்கு செல்லவும், சுற்றுலா பயணிகள் கடற்கரைக்கு செல்லவும் மாவட்ட நிர்வாகம் தடையும் விதித்துள்ளது. இந்த நிலையில் சென்னையை சேர்ந்த 16-பேர் கொண்ட குழு ஆன்மீக சுற்றுலாவாக கன்னியாகுமரி வந்துள்ளனர். அவர்கள் குளச்சல் அருகே கோடிமுனை மீனவ கிராமத்தில் உள்ள ஆலயத்தை சுற்றி பார்த்து விட்டு மதிய உணவு ஏற்பாடுகளை செய்து வந்துள்ளனர்.

அப்போது அந்த குழுவில் இருந்த மனோஜ்குமார், விசூஸ் ஆகியோர் கடற்கரைக்கு சென்று கடலில் உள்ள பாறை மீது ஏறி நின்று கடல் அலைகளை பார்த்து ரசித்துள்ளனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் சிக்கிய இருவரும் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்ட மாயமான நிலையில் தகவல் அறிந்து வந்த மீனவர்கள் படகுகள் மூலம் தேடி படுகாயங்களுடன் இருவரையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர்.

இருவரையும் பொதுமக்கள் பைக் மற்றும் கார் மூலம் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் இருவரையும் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனையடுத்து இருவரின் சடலத்தையும் கைப்பற்றி ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த கடலோர காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னையில் இருந்து ஆண்மீக சுற்றுலா வந்த சுற்றுலா பயணிகள் இருவர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

02:45சென்னை ரயில் பயணிகளே அலர்ட்! 5 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் மாற்றம்! முழு விவரம்!
10:24அமைதியான திருப்பரங்குன்றம்; சீரான டாஸ்மாக் விற்பனை: அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
02:34Ration: ரேஷன் கடைகள் டோட்டலா மாறுது.. இனி அரிசி, பருப்பு இப்படிதான் கிடைக்கும்.. தமிழக அரசு அப்டேட்!
10:09"போனவர்கள் எப்போது வேண்டுமானாலும் திரும்ப வரலாம்!" - நயினார் நாகேந்திரன் அதிரடி ஓப்பன் டாக்! 💥
03:06தமிழக அரசியலில் யாரும் செய்யாத சாதனை.! எத்தனை லட்சம் பேர் இணைந்துள்ளார்கள் தெரியுமா?
03:09Annamalai: அண்ணாமலை எடுத்த விஸ்வரூப முடிவின் பின்னணி.! 'அல்டிமேட்' ஐந்து காரணங்கள் இதுதான்!
04:04"பாஜக தலைவராக அண்ணாமலை சிறப்பாகச் செயல்பட்டார்" - பாராட்டிய திருமாவளவன்!
08:34முதலமைச்சர் விஜய் கொடுத்த 436 திட்டங்கள்" – புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர்!
08:19மதுரையில் வீரமாகாளியம்மன் கோவில் திருவிழா: திரண்ட ஆயிரக்கணக்கான பக்தர்கள்!
03:35TVK vs DMK | புறக்கணித்த மேயர்... புறந்தள்ளிய எம்.எல்.ஏ! சென்னையில் அரங்கேறும் ‘ஈகோ’ யுத்தம்!