தமிழ் சினிமாவில் 90-களில் முன்னணி ஹீரோவாக இருந்தவர் சரத்குமார். இவரின் மூத்த மகளான வரலட்சுமி சரத்குமார், தற்போது தமிழ் சினிமாவில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட நடிகையாக உள்ளார். இவருக்கு 18 வயது ஆகும் முன்பே, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான 'பாய்ஸ்' மற்றும் சந்தியா - பரத் நடிப்பில் வெளியான 'காதல்' போன்ற படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.
இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றாலும், வணிக ரீதியாக தோல்வியை சந்தித்தது. எனினும் தன்னுடைய முதல் படத்திலேயே நடிப்பிலும், நடனத்திலும், தன்னுடைய திறமையை நிரூபித்தார். இருந்தாலும் அந்த சமயத்தில் வரலட்சுமி சரத்குமாருக்கு தமிழில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்கவில்லை. எனவே தெலுங்கு, கன்னடம், போன்ற மொழிகளிலும் கவனம் செலுத்த துவங்கினார்.
தமிழில் ஒரு சிறு கேப் எடுத்துக்கொண்ட வரலட்சுமி சரத்குமார், பின்னர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளியான 'தாரை தப்பட்டை' படத்தில் மீண்டும் ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். இந்த படத்தில் இவருடைய திறமைக்கு பாராட்டுகளும், பல்வேறு விருதுகளும் கிடைத்தது. தாரை தப்பட்டை திரைப்படமும் இவருக்கு வணிக ரீதியில் தோல்வியை கொடுத்தாலும், அடுத்தடுத்த படங்களில் இவரை கமிட் செய்ய பல இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர். மேலும் ஹீரோயின் ஆக மட்டுமே நடிக்காமல், குணச்சித்திர கதாபாத்திரம், வில்லி போன்ற பரிமாணங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்தார்.
விஜய் - அஜித் மேரேஜ் லிஸ்டுலையே இல்ல! திருமணத்திற்கு அதிகம் செலவு செய்த 6 தென்னிந்திய நடிகர்கள் இவர்கள் தான்!
தற்போது வரலட்சுமி சரத்குமாருக்கு 38 வயது ஆகும் நிலையில், கடந்த மாதம் தான் இவருக்கு காதலர் நிக்கோலாய் சச்தேவ் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது. மும்பையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடந்த இவர்களின் நிச்சயதார்த்தத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மட்டுமே கலந்து கொண்டனர். மேலும் நிக்கோலாய் சச்தேவ் ஆர்ட் கேலரி ஒன்றை மும்பையில் நடத்தி வருகிறார். ஏற்கனவே திருமணமாகி மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்ற தன்னுடைய 14 ஆண்டு கால நண்பரை தான் வரலட்சுமி தற்போது திருமணம் செய்துகொள்ள உள்ளார்.
இந்நிலையில் வரலட்சுமி சரத்குமார் அண்மையில் கொடுத்த பேட்டி ஒன்றில், தன்னுடைய சினிமா வாழ்க்கை முதல் பர்சனல் வரை அனைத்திலுமே... நான் போட்ட பிளான் சொதப்பிவிட்டது என்று ஓப்பனாக கூறி உள்ளார். அதாவது இவர் 'போடா போடி' படத்தில் அறிமுகமான போது இவருக்கு 22 வயது. எனவே எப்படியும் 28 வயதுக்குள் பெரிய நடிகையாக மாறிவிட வேண்டும் என்று நினைத்தாராம்... அதே போல் 32 வயதில் திருமணம் செய்து கொண்டு, 34 வயதில் குழந்தைகள் பெற்றெடுக்கும் பிளான் வைத்திருந்தாராம்.
6 நாட்களாக வெண்டிலேட்டர் சிகிச்சையில் நடிகை அருந்ததி நாயர்! பணம் இல்லாமல் தவிக்கும் குடும்பம்! தற்போதைய நிலை!
ஆனால் இவருக்கு தற்போது 38 வயது ஆகிவிட்டது. எனவே தன்னுடைய கெரியரிலும் சரி வாழ்க்கைகளும் சரி நான் போட்ட பிளான் சொதப்பிவிட்டது. எனவே எப்போதுமே வாழக்கையில் பிளான் பண்ணாதீங்க என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்... 'போடா போடி' படத்திற்கு பின்னர் பர்சனல் வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்தினேன். அது தான் நான் செய்த பெரிய தவறு. இதனால் தன்னுடைய சினிமா கேரியர் பாதித்துவிட்டது. இதுவே எனக்கு பேரிடியாக அமைந்தது. ஒரு வேலை நான் முழுமையாக சினிமாவில் கவனம் செலுத்தி இருந்தால் அதிகமான படங்களில் நடித்திருப்பேன். ஒரு கட்டத்தில் வாய்ப்பு வராத போது என்னை பற்றி நானே பல கேள்விகளை கேட்டு கொண்டேன் ஆனால் தோல்விகள் தான் என்னை பலப்படுத்தியது என்றும் கூறியுள்ளார்.