Land Dispute : தென்காசி.. இட தகராறில் ஏற்பட்ட சண்டை - வயதான பெண்மணியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்! Video!

Land Dispute : தென்காசி.. இட தகராறில் ஏற்பட்ட சண்டை - வயதான பெண்மணியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்! Video!

Ansgar R |  
Published : May 19, 2024, 10:06 PM IST

Land Dispute : தென்காசி அருகே இட தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட சண்டையில், அரசு மருத்துவர் ஒருவர் தாக்கியதில் வயதான பெண்மணி படுகாயம் அடைந்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வடநத்தம்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் சமுத்திரவள்ளி. இவர் வீட்டை ஒட்டி ஜான் சிவக்குமார் என்பவர் வீட்டின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 11.5.2024 அன்று சமுத்திரவள்ளியின் வீட்டு சுவர் மீது சேதம் ஏற்படுத்தும் விதமாக ஜான் சிவகுமார் வீடு கட்டுமான பணிகள் நடந்ததாக கூறப்படுகின்றது. 

இதைத் தொடர்ந்து சமுத்திரவள்ளியின் மகன், தங்களது வீட்டு சுவர் பாதிக்கப்படுவதாக ஜான் சிவகுமார் வீட்டில் போய் சொல்லவே, இதில் ஆத்திரமடைந்த அவரது மருமகன், அரசு மருத்துவர் முத்துக்குமார் மற்றும் அவருடைய மாமியார், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து சமுத்திரவள்ளி மற்றும் அவரது மகனையும் தாக்கி சமுத்திரவள்ளியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்த சேர்ந்தமரம் போலீசார், இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர் முத்துக்குமார் பக்கத்து வீட்டு சமுத்திரவள்ளியை அடித்து கீழே தள்ளும்  சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
06:34மக்கள் மீது அக்கறை உள்ள முதலமைச்சரா? விளம்பர தேடும் முதலமைச்சரா? - ஆர்.பி.உதயகுமார் கடும் பாய்ச்சல்
06:09செங்கோட்டையன் ஒரு முயற்சியில் ஈடுபட்டார்....அதுவே அவருக்கு ஆபத்தாக முடிந்தது ! டிடிவி தினகரன் பேட்டி
06:49தமிழக அரசு அறிவித்த சுத்திகரிப்பு நிலையத்தை இன்னும் 4 மாதங்களில் ஆவது நிறைவேற்ற வேண்டும் - பிரேமலதா
03:53வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் பெருகி வருகிறது...! திருமாவளவன் பேட்டி
05:37ஒரு எம்ஜிஆர், ஒரு கேப்டன் தான் அவர்களுக்கு மாற்று யாரும் இல்லை - பிரேமலதா விஜநகாந்த் பேட்டி
04:23தவெகவில் இணைந்த செங்கோட்டையன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் ! சீமான் பேட்டி
02:43அதிமுகவில் இப்படிப்பட்ட பலவீனம் ஏற்படுவதை பாஜக ஏன் வேடிக்கை பார்க்கிறது? - திருமாவளவன் பேட்டி
Read more