Land Dispute : தென்காசி.. இட தகராறில் ஏற்பட்ட சண்டை - வயதான பெண்மணியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்! Video!

Land Dispute : தென்காசி.. இட தகராறில் ஏற்பட்ட சண்டை - வயதான பெண்மணியை கொடூரமாக தாக்கிய அரசு மருத்துவர்! Video!

Ansgar R |  
Published : May 19, 2024, 10:06 PM IST

Land Dispute : தென்காசி அருகே இட தகராறு சம்பந்தமாக ஏற்பட்ட சண்டையில், அரசு மருத்துவர் ஒருவர் தாக்கியதில் வயதான பெண்மணி படுகாயம் அடைந்துள்ளார். 

தென்காசி மாவட்டம் சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட, வடநத்தம்பட்டி அம்பேத்கர் காலணியில் வசித்து வருபவர் சமுத்திரவள்ளி. இவர் வீட்டை ஒட்டி ஜான் சிவக்குமார் என்பவர் வீட்டின் கட்டுமானப் பணிகள் நடந்து வந்த நிலையில், கடந்த 11.5.2024 அன்று சமுத்திரவள்ளியின் வீட்டு சுவர் மீது சேதம் ஏற்படுத்தும் விதமாக ஜான் சிவகுமார் வீடு கட்டுமான பணிகள் நடந்ததாக கூறப்படுகின்றது. 

இதைத் தொடர்ந்து சமுத்திரவள்ளியின் மகன், தங்களது வீட்டு சுவர் பாதிக்கப்படுவதாக ஜான் சிவகுமார் வீட்டில் போய் சொல்லவே, இதில் ஆத்திரமடைந்த அவரது மருமகன், அரசு மருத்துவர் முத்துக்குமார் மற்றும் அவருடைய மாமியார், மனைவி மற்றும் மைத்துனர் ஆகியோர் சேர்ந்து சமுத்திரவள்ளி மற்றும் அவரது மகனையும் தாக்கி சமுத்திரவள்ளியை கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. 

இதில் அவர் தலையில் படுகாயம் அடைந்த நிலையில் தென்காசி அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த மோதல் குறித்த சேர்ந்தமரம் போலீசார், இரு தரப்பு மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவர் முத்துக்குமார் பக்கத்து வீட்டு சமுத்திரவள்ளியை அடித்து கீழே தள்ளும்  சிசிடிவி காட்சிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் பரவி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

03:02செவிலியர்கள் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்
04:38தலைவர் விஜய் குறித்து அனைவரும் கருத்து சொல்வதற்கு காரணம் தோல்வி பயம் ! TVK செங்கோட்டையன் பேட்டி
03:33எடப்பாடி பழனிச்சாமி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு விட்டார் - அமைச்சர் ரகுபதி பேட்டி.
04:35சேகர்பாபு போல நான் அண்டிப்பிழைக்கும் ஆண்டி அல்ல.. ரவுடி போல சேகர்பாபு இருக்கிறார் - அண்ணாமலை பேட்டி
04:14நாட்டின் நிலவரம் என்னவென்றே விஜய்க்கு தெரியவில்லை...இவரை வைத்து என்ன செய்வது..? இபிஎஸ் பேட்டி
03:28கூட்டணி பேச்சுவார்த்தை காங்கிரஸ்யிடம் நடந்து வருகிறது தொகுதி எண்ணிக்கை குறித்து பேசவில்லை - கனிமொழி
03:05அண்ணா மற்றும் திராவிடத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு நான் பதிலளிக்க விரும்பவில்லை ! வைகோ பேட்டி
02:32கோயில் அருகே சுடுகாடு மற்றும்பாதாள சாக்கடை திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு கிராம மக்கள் எச்சரிக்கை
04:50விஜய்யின் இன்ஜினில் ஆயில் இல்லை...எங்களிடம் 2 டபுள் இன்ஜின் இருக்கிறது ! அண்ணாமலை அதிரடி பேட்டி
02:03விஜய்க்கு முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஒற்றை எண்ணம் மட்டும் தான் ! டிகேஎஸ் இளங்கோவன் பேட்டி
Read more