அதாவது ஜானகி நீ அப்பாவ பத்தி தப்பா புரிஞ்சுகிட்டு இருக்க என்று தனத்தை திட்டி கோபமாக வெளியே வருகிறார். பிளாஷ் கட்டில் சாரு தனத்திடம் நீ கொஞ்சம் நடக்கும்போது வீட்டுக்கு தெரியாம வெளியே போய் பேட்மிட்டன் விளையாட்டி வந்த விஷயம் எல்லாம் எனக்கு தெரியும் என்று நல்லவள் போல் பேசுகிறாள்.
அடுத்ததாக மாயா மொட்டை மாடியில் நின்று கொண்டிருக்க அங்கு வரும் சாரு நீ தனம் ஜானகி என மூன்று பேரும் சேர்ந்து போட்ட நாடகத்தால் எங்க அப்பா தான் அவமானப்பட்டு ரகுராம் அங்கிள் கால்ல விழுந்து மன்னிப்பு கேட்க வேண்டியதா போயிடுச்சு. இதுக்கெல்லாம் காரணம் நீதான் உன்னை சும்மா விடமாட்டேன் பழிக்கு பழி தீர்ப்பேன் என கூறுகிறாள்.
மாயா இந்த விஷயத்தை ஜானகியிடம் சொல்ல முடிவெடுத்து அவளை கூப்பிட்டு சொல்ல ஜானகி நம்ப மறுக்கிறாள். இதனால் அவளோட உண்மை முகத்தை ஆதாரத்தோடு நிரூபிக்கிறேன் என அங்கிருந்து நகர்கிறாள் மாயா. மேலும் ஏற்கனவே சாரு ஜானகியை சந்தித்து மாயா தன்னை தப்பாக புரிந்து கொண்டிருப்பதாக பேசி நல்லவள் வேஷம் போட்ட விஷயங்கள் தெரிய வருகிறது. இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய சந்தியா ராகம் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.