சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா, தனுஷிடம் இருந்து பிரிந்த பின்னர்... தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்த நிலையில் தற்போது அப்பார்ட்மெண்ட் ஒன்றில் புதிய வீடு ஒன்றை வாங்கி குடியேறியுள்ளார். இதற்காக அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
2012-ஆம் ஆண்டு தன்னுடைய கணவர் தனுஷை ஹீரோவாக வைத்து இவர் இயக்கிய திரைப்படம் '3'. பயோ போலார் டிஸ்ஸாடர் என்கிற மனநோயை மையமாக வைத்து, காதல் படமாக இந்த படத்தை இயக்கி இருந்தார் ஐஸ்வர்யா.
இந்த படத்தை தொடர்ந்து ஐஸ்வர்யா இயக்கிய வை ராஜா வை, எதிர்பார்த்த அளவுக்கு பெற்றிபெறவில்லை. நீண்ட இடைவெளிக்கு பின்னர் இந்த ஆண்டு பொங்கலை குறித்து வைத்து இவர் இயக்கிய, 'லால் சலாம்' திரைப்படம் வெளியானது.
மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், தோல்வியை தழுவியது. இப்படத்தின் தோல்விக்கு காரணம், இந்த படத்தின் ஷூட்டிங் வீடியோ தொலைந்து விட்டதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் ஐஸ்வர்யா.
தற்போது தன்னுடைய அடுத்த படத்திற்காக ஐஸ்வர்யா தயாராகி வரும் நிலையில், அண்மையில் தனுஷிடம் இருந்து விவாகரத்து பெற சென்னை குடும்ப நல நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றையும் பதிவு செய்தார். இது ஒருபுறம் இருக்க, தற்போது தனக்கென வீடு ஒன்றை வாங்கி, அதில் மகன்களோடு குடியேறியுள்ளார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். தனித்துவமான இன்டீரியர் டிசைன்களுடன்... தனுஷுக்கு சவால் விடும் விதத்தில் இவர் வாங்கியுள்ள வீட்டின் கிரஹப்ரவேசன் அண்மையில் மிகவும் எளிமையாக நடந்தது.
Varalaxmi: வரலட்சுமியின் வருங்கால கணவரின் தோற்றத்தை ட்ரோல் செய்த நெட்டிசன்கள்! பளார் பதிலடி கொடுத்த நடிகை!
இதில் ஐஸ்வர்யாவின் தந்தை ரஜினி, தாயார் லதா, அவரின் இரு மகன்களான லிங்கா, யாத்ரா மற்றும் அவரின் தோழி என சிலர் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர். தற்போது இந்த வீடு குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.