thalaivar 169
ரஜினி நடிப்பில் கடைசியாக வெளியான அண்ணாத்த திரைப்படம் கடுமையான விமர்சனங்களை பெற்று தந்தது. அந்த விமர்சனத்திற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ரஜினி அடுத்ததாக, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் தலைவர் 169 படத்தில் இணைத்துள்ளார். இப்படத்தை சன் பிச்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.
thalaivar 169
இந்த படத்தில், ரஜினியுடன் சேர்ந்து ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ். ரவிக்குமார், சிவராஜ்குமார், பிரியங்கா மோகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப்போவதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், நெல்சனின் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் கடுமையான விமர்சனங்களை சந்தித்ததால், ரசிகர்கள் பலரும் நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்தால் எப்படி இருக்குமோ என்று புலம்பி வருகின்றனர்.
thalaivar 169
இருப்பினும் ரஜினி கதையில் சிறு சிறு மாற்றங்கள் செய்து நடிக்க தயாராகி வருகிறார். அதன்படி, இம்மாத இறுதிக்குள் கதை தயாராகிவிடும் என்றும், ஜூலை மாதம் இறுதியில் தலைவர் 169 படத்தின் படப்பிடிப்பு துவங்கப்படும் என்றும் தகவல்கள் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.