சுந்தர் சி-யின் கெரியரில் மிகப்பெரிய ஹிட் அடித்த படம் என்றால் அது அரண்மனை தான். அப்படத்தின் முதல் பாகம் கடந்த 2014-ம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட் அடித்ததை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முடிவெடுத்த சுந்தர் சி. கடந்த 2016-ம் ஆண்டு அப்படத்தை வெளியிட்டார்.
முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகமும் வசூலில் சக்கைப்போடு போட்டதால், கடந்த 2021-ம் ஆண்டு அப்படத்தின் மூன்றாம் பாகத்தை இயக்கி வெளியிட்டார் சுந்தர் சி. முதல் இரண்டு பாகங்கள் அளவுக்கு இப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெறாவிட்டாலும் வசூலில் நல்ல லாபம் பார்த்தது.
அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கி, ஹீரோவாக நடித்துள்ளதோடு மட்டுமின்றி அப்படத்தை தன்னுடைய மனைவி குஷ்பு உடன் சேர்ந்து தயாரித்தும் உள்ளார் சுந்தர் சி. இப்படம் கடந்த ஏப்ரல் 26-ந் தேதியே திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் மே 3-ந் தேதிக்கு மாற்றப்பட்டது.
இந்த நிலையில் அரண்மனை 4 திரைப்படம் வருகிற மே 3-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளதால் அதற்கான புரமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. நடிகைகள் தமன்னா, ராஷி கண்ணா, இயக்குனர் சுந்தர் சி ஆகியோர் அதற்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு படம் குறித்த சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து வருகின்றனர்.