மதுரை ஒத்தக்கடையில் ஃபுல் மப்பில் இளைஞர்கள்.. பைக்கில் சென்றவரை இழுத்து போட்டு தாக்கிய சிசிடிவி காட்சி!

Apr 28, 2024, 1:33 PM IST

மதுரை ஒத்தக்கடை பகுதியில் மதுபோதையில் சாலையில் நடந்து சென்ற வரை தாக்கும் பகீர் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் ஒத்தக்கடை ஐயப்பன் நகர் பகுதியில் கடந்த 22ம் தேதி இரவு 5க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மது போதையில் நடந்து சென்றுக்கொண்டிருந்தனர். 
அப்போது அவ்வழியாக வந்த நபரை  தடுத்து நிறுத்தி தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. மேலும் அந்த நபர் தாக்கியதை தட்டி கேட்ட அருகில் உள்ள கடை உரிமையாளரை அந்த கும்பல் தாக்கியதோடு கடையில் உள்ள பொருட்களை அடித்து நொறுக்கி சென்றுள்ளனர். 

ஏற்கனவே இதே போன்ற ஒரு கும்பல் பைக்கில் செல்லும் நபர் ஒருவரை அடித்து உதைத்து காயப்படுத்திய சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய  நிலையில் மேலும் தற்போது தாக்குதல் நடத்தக்கூடிய கூடுதலான சிசிடிவி கட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக  மூன்றுக்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் 

இந்நிலையில் ஒத்தக்கடை பகுதியில் அதிகளவிற்கு போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகவும் அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. ஆகையால்  நாளை ஒத்தக்கடை பகுதி பொதுமக்கள் சார்பாக நாளை ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் மற்றும் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.