Ninaithen Vandhai : வேலுவுக்கு தண்ணி காட்டிய சுடர்.‌. எழில் செய்யும் உதவி - நினைத்தேன் வந்தாய் சீரியல் அப்டேட்

First Published Mar 29, 2024, 2:52 PM IST

நினைத்தேன் வந்தாய் சீரியலில் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு பார்த்துவிட்டு பின் தொடர்ந்த நிலையில் இன்று நடக்க போவதை பார்க்கலாம்.

Ninaithen Vandhai Serial

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் நினைத்தேன் வந்தாய்.  இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சுடரை வேலு பார்த்துவிட்டு பின் தொடர்ந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. 

Zee Tamil Ninaithen Vandhai Serial

அதாவது வேலு போலீசுக்கு போன் போட்டு சுடர் வரும் காரை டோல்கேட்டில் மடக்கிப்பிடிக்க சொல்கிறான். இதையடுத்து போலீசும் டோல்கேட்டில் சோதனை போட சுடர் ஒரு வழியாக அவர்களிடம் சிக்காமல் எஸ்கேப் ஆகி விடுகிறாள். பிறகு எழில் ஹாஸ்பிடல் செல்வதற்காக வழியில் இறங்கிக் கொள்கிறார்.

இதையும் படியுங்கள்... Sivaangi Krish : குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கிக்கு கல்யாணமா? அவரே போட்ட சமூக வலைதள பதிவு வைரல்

Ninaithen Vandhai Serial Update

இவர்கள் வீட்டுக்கு வந்ததும் கனகவல்லி சுடரை பார்த்து என்னாச்சுமா ஒரு மாதிரி இருக்க என்று கேட்க நடந்த விஷயங்களை சொல்ல அவர் சரி நீ போய் ரெஸ்ட் எடுமா நான் சாப்பாடு கொடுக்கிறேன் என அனுப்பி வைக்கிறார். அடுத்ததாக லேட்டாக வீட்டுக்கு வரும் எழில் எல்லோரும் தூங்கிய பிறகு குழந்தைகளிடம் சென்று அன்பாக கேட்டுவிட்டு வெளியே வருகிறார். 

Ninaithen Vandhai Serial Today Episode

அப்போது சுடர் ரூமில் ஏதோ சத்தம் கேட்டு உள்ளே செல்ல அவள் காய்ச்சலால் தவித்துக் கொண்டிருக்கிறாள். இதனால் எழில் சுடருக்கு ட்ரீட்மென்ட் கொடுத்து பக்கத்திலேயே இருந்து பார்த்துக் கொள்கிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய நினைத்தேன் வந்தாய் சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.

இதையும் படியுங்கள்... KPY Bala : மருத்துவமனை கட்டி... அனைவருக்கும் இலவச சிகிச்சை! அடுத்த டார்கெட் இதுதான்... மனம்திறந்த பாலா

click me!