கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடிக்கும் போது இருவருக்கு இடையேயும் காதல் தீ பற்றிக்கொள்ள, இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் உருகி உருகி காதலித்து... 2022 -ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
பொதுவாக நயன்தாரா, நேரம் கிடைக்கும்போதெல்லாம்.. விக்கியுடன் வெளிநாடுகளுக்கு சென்று என்ஜாய் பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் தன்னுடைய குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்களின் நலன் கருதி, வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். குறிப்பாக பிறந்தநாள் செல்லபிரேஷன்களை கூட, சென்னையில் உள்ள தங்களுடைய வீட்டில் இருவருமே கடந்த ஆண்டு கொண்டாடினார்கள்.
கடந்த சில தினங்காலாகவே, நயன்தாரா விக்கியை அன் ஃபாலோ செய்தது, தோர்த்துவிட்டேன் விட்டேன் என பதிவிட்டது போன்றவை, ரசிகர்களை குழப்பம் அடைய செய்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.