Nayanthara Photo: தூரமாக செல்கிறோம்... குழந்தைகளுடன் நயன் - விக்கி பகிர்ந்த புகைப்படம்! இதில் கூட இடைவெளியா?

First Published Mar 8, 2024, 1:00 PM IST

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தங்களுடைய இரட்டை குழந்தைகளுடன் வெளிநாட்டிற்கு செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
 

கோலிவுட் திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை நயன்தாரா. இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 'நானும் ரவுடி தான்' படத்தில் நடிக்கும் போது இருவருக்கு இடையேயும் காதல் தீ பற்றிக்கொள்ள, இருவரும் சுமார் 6 ஆண்டுகளுக்கு மேல் உருகி உருகி காதலித்து... 2022 -ஆம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர்.
 

திருமணம் ஆன நான்கே மாதத்தில், வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. குடும்பம் - குழந்தை என இரண்டையும் நேர்த்தியாக கவனித்துக்கொண்டு, திரைப்படங்கள் நடிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் விக்கியும்... நயன்தாராவின் பிஸ்னஸ் மற்றும் தற்போது இயக்கி வரும் LIC  படத்தில் ஆர்வம் காட்டி வருகிறார்.

விஜய் டிவியை விட்டு வெளியேற இது தான் காரணம்? சிவகார்த்திகேயன் விஷயம் முதல் பர்சனல் வரை பகிர்ந்த பாவனா!
 

பொதுவாக நயன்தாரா, நேரம் கிடைக்கும்போதெல்லாம்.. விக்கியுடன் வெளிநாடுகளுக்கு சென்று என்ஜாய் பண்ணுவதை வழக்கமாக வைத்திருந்தார். ஆனால் தன்னுடைய குழந்தைகள் பிறந்த பின்னர், அவர்களின் நலன் கருதி, வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து வந்தார். குறிப்பாக பிறந்தநாள் செல்லபிரேஷன்களை கூட, சென்னையில் உள்ள தங்களுடைய வீட்டில் இருவருமே கடந்த ஆண்டு கொண்டாடினார்கள்.
 

ஆனால் தற்போது தங்களின் குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்து விட்டதால், நீண்ட இடைவெளிக்கு பின்னர் தங்களின் குழந்தைகளுடன் தூரமாக செல்கிறோம் என, நயன்தாரா இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ளார். அதே போல் தங்களின் குழந்தைகள் வசதிக்காக இருவரும் தனித்தனியே அமர்ந்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கை செயலி அறிமுகம்! முதல் உறுப்பினர் யார் தெரியுமா?

கடந்த சில தினங்காலாகவே, நயன்தாரா விக்கியை அன் ஃபாலோ செய்தது, தோர்த்துவிட்டேன் விட்டேன் என பதிவிட்டது போன்றவை, ரசிகர்களை குழப்பம் அடைய செய்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள புகைப்படம் ரசிகர்களை நிம்மதியடைய செய்துள்ளது.

click me!