Niharika Konidela
டோலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர், நாக பாபுவின் ஒரே மகளான நிஹாரிக்காகவுக்கும், சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9-ஆம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள உதய்பூர் அரண்மனையில் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
திருமணத்திற்கு பின்னர் மிகவும் சந்தோஷமாக கணவருடன் வாழ்க்கையை தொடங்கிய நிஹாரிகா, இரண்டே வருடத்தில் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக, கணவரிடம் இருந்து பிரிந்து தன்னுடைய பெற்றோருடன் சில மாதங்கள் தனியாக வசித்து வந்தார்.
இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நிஹாரிக்கா மற்றும் சைதன்யா இருவருமே இது குறித்து வெளிப்படையாக எதுவுமே பேசவில்லை. மேலும் விவாகரத்துக்கு பின்னர் இருவருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.
இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால் நாம் நினைப்பது எதுவும் அதேபோல் நடந்து விடுவதில்லை. அப்படிதான் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நான் விவாகரத்து பெற்றபோது, என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினார்கள். அந்த சமயத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்னுடைய குடும்பம் தான். அந்த இரண்டு வருடம், என்னுடைய குடும்பத்தின் மதிப்பு குறித்து நான் புரிந்து கொண்டேன். அதேபோல் யாரையும் அப்பட்டமாக நம்பி விடக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன்.