விவாகரத்தான ஒரே வருடத்தில் மறுமணம் செய்யபோவதை உறுதி செய்த மெகா ஸ்டார் மகள் நிஹாரிகா! திருமணம் எப்போது?

First Published Jan 28, 2024, 2:57 PM IST

கடந்த ஆண்டு தன்னுடைய காதல் கணவர் சைதன்யாவிடம் இருந்து, விவாகரத்து பெற்று பிரிவதை உறுதி செய்த,மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பி மகளும், நடிகையுமான நிஹாரிக்கா தற்போது தன்னுடைய மறுமணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
 

Niharika Konidela

டோலிவுட் திரை உலகின் முன்னணி நட்சத்திரமான மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் சகோதரர், நாக பாபுவின் ஒரே மகளான நிஹாரிக்காகவுக்கும், சைதன்யா ஜொன்னலகட்டாவுக்கும் கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், 9-ஆம் தேதி, ஜெய்ப்பூரில் உள்ள உதய்பூர் அரண்மனையில் மிகப்பிரமாண்டமாக திருமணம் நடந்தது.
 

Niharika Konidela

இவர்களுடைய திருமணத்தில் ஒட்டுமொத்த டோலிவுட் திரையுலகமே கலந்து கொண்டது.  மூன்று நாட்கள் நடந்த இவர்களுடைய திருமண கொண்டாட்டத்தின் புகைப்படங்களும், சமூக வலைதளத்தில் படு வைரலானது.

ஆபத்தாய் மாறிய அழகு! பிரபல பாடகியின் உயிரை பறித்த காஸ்மெட்டிக் அறுவை சிகிச்சை! அதிர்ச்சியில் ரசிகர்கள்!
 

திருமணத்திற்கு பின்னர் மிகவும் சந்தோஷமாக கணவருடன் வாழ்க்கையை தொடங்கிய நிஹாரிகா, இரண்டே வருடத்தில் கணவருடனான கருத்து வேறுபாடு காரணமாக,  கணவரிடம் இருந்து பிரிந்து தன்னுடைய பெற்றோருடன் சில மாதங்கள் தனியாக வசித்து வந்தார். 
 

இதுகுறித்த தகவல் வெளியானதும் மீடியாக்களில்... நிஹாரிகா கணவரை விவாகரத்து செய்ய உள்ளதாக கூறப்பட்டது. ஒரு கட்டத்தில் இந்த தகவலை உறுதி செய்த நிஹாரிகா... கணவர் சைதன்யாவிடம் இருந்து பரஸ்பரமாக பிரிவதை அறிவித்தார். அதன்படி நிஹாரிகா சைதன்யாவிடம் இருந்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் விவாகரத்து பெற்று பிரிந்தார்.

கதையை முடித்த விஜய் டிவி.! ஜீ தமிழுக்கு தாவிய ஹீரோ.. விரைவில் உதயமாகும் புதிய சீரியல்! ஹீரோயின் யார் தெரியுமா?
 

இவர்களின் விவாகரத்துக்கு காரணம் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், நிஹாரிக்கா மற்றும் சைதன்யா இருவருமே இது குறித்து வெளிப்படையாக எதுவுமே பேசவில்லை. மேலும் விவாகரத்துக்கு பின்னர் இருவருமே தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தற்போது கவனம் செலுத்தி வருகின்றனர்.

சமீபத்தில் நிஹாரிகாவின் சகோதரரும், நடிகருமான வருண் தேஜுக்கும், நடிகை லாவண்யா திரிபாதிக்கும் திருமணம் நடந்து முடிந்தது.  இதைத்தொடர்ந்து நிஹாரிக்கா முதல் முறையாக தன்னுடைய மறுமணம் குறித்த கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

Top 10 TRP : அதிரடி.. சரவெடி.. மளமளவென முன்னுக்கு வந்த 'எதிர்நீச்சல்! செம்ம டஃப் கொடுக்கும் விஜய் டிவி தொடர்!

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில், "வாழ்நாள் முழுவதும் சேர்ந்திருக்க வேண்டும் என்று தான் திருமணம் செய்து கொள்கிறோம். ஆனால் நாம் நினைப்பது எதுவும் அதேபோல் நடந்து விடுவதில்லை. அப்படிதான் என் வாழ்க்கையிலும் நடந்துள்ளது. நான் விவாகரத்து பெற்றபோது, என்னைப் பற்றி பலரும் பலவிதமாக பேசினார்கள். அந்த சமயத்தில் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தது என்னுடைய குடும்பம் தான். அந்த இரண்டு வருடம், என்னுடைய குடும்பத்தின் மதிப்பு குறித்து நான் புரிந்து கொண்டேன். அதேபோல் யாரையும் அப்பட்டமாக நம்பி விடக்கூடாது என்பதையும் புரிந்து கொண்டேன்.
 

Niharika Konidela

இப்போது எனக்கு 30 வயது தான் ஆகிறது. அதனால் கண்டிப்பாக ஒரு நல்லவர் கிடைத்தால் மறுமணம் செய்து கொள்வது பற்றி யோசிக்க தயாராக இருக்கிறேன் என கூறியுள்ளார். இவருடைய இந்த பதிலிலிருந்து நிஹாரிக்கா மறுமணத்திற்கு தயாராகி விட்டதை உறுதி செய்துவிட்டார் என்றும், ஓரிரு வருடத்தில் திருமணம் குறித்த அறிவிப்பு வரலாம் என்றும் நெட்டிசன்கள் தங்களின் கருத்தை தெரிவித்து வருகிறார்கள்.

நீ போதும்... காற்று கூட நுழைய முடியாதபடி கட்டியணைத்து காதலனுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பிரியா பவானி ஷங்கர்

click me!