கமர்ஷியல் படங்களை இயக்குவதில் கில்லாடி இயக்குனராக திகழ்ந்து வருபவர் ஹரி. இவர் இயக்கத்தில் வெளிவந்த சாமி, சிங்கம், ஆறு, வேல், பூஜை, தாமிரபரணி போன்ற படங்கள் சக்கைப்போடு போட்டன. அடுத்ததாக் இயக்குனர் ஹரி இயக்கத்தில் ரத்னம் படம் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் விஷால் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து உள்ளார். ரத்னம் படம் வருகிற ஏப்ரல் மாதம் திரைக்கு வருகிறது.
இதில் சிங்கம் இரண்டாம் பாகம் ஹிட் அடித்தாலும், மூன்றாம் பாகம் பெரியளவில் சோபிக்கவில்லை. இதனால் சூர்யாவும் சிங்கம் மோடில் இருந்து வெளியே வந்துவிட்டார். அதன்பின்னர் ஹரியும் சூர்யாவும் அருவா என்கிற படத்தில் இணைந்து பணியாற்றுவதாக இருந்தது. அப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி ஷூட்டிங் தொடங்க இருந்த சமயத்தில் கொரோனா லாக்டவுன் போடப்பட்டதால் அப்படத்தை அப்படியே டிராப் செய்துவிட்டனர்.
இந்த நிலையில், சிங்கம் 4-ம் பாகம் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசி இருக்கிறார் ஹரி. அதில் அவர் கூறியதாவது : “நான் எங்கு சென்றாலும் சிங்கம் 4 பற்றி கேட்கிறார்கள். அது ஹாட்ரிக் ஹிட் அடித்த படம் என்பதால் அடுத்த பாகத்திற்கு அதிக உழைப்பு தேவைப்படுகிறது. எனக்கும் சூர்யாவுக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை. சிங்கம் 4 உருவாவது பற்றி காலம் தான் பதில் சொல்லும்” என கூறி இருக்கிறார் இயக்குனர் ஹரி.
இதையும் படியுங்கள்... கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக கை ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!