கேப்டன் விஜயகாந்த் மகனின் 'படை தலைவனு'க்கு பக்க பலமாக கை ராகவா லாரன்ஸ்! சம்பளம் குறித்து வெளியான தகவல்!
கேப்டன் விஜயகாந்த் மகன் நடிக்கும், படைத்தலைவன் படத்தில்... பிரபல இயக்குனரும் நடிகருமான ராகவா லாரன்ஸ் இணைந்துள்ள தகவலை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.
மறைந்த தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன் கடந்த சில வருடங்களாகவே திரையுலகில் தன்னை ஒரு நடிகராக நிலைநிறுத்திக்கொள்ள போராடி வருகிறார். இதற்க்கு முன் நடிப்பில் வெளியான படங்கள் ஏதும் சொல்லிக்கொள்ளும்படி வெற்றிபெறாத நிலையில்... தற்போது இவர் மிகவும் ரிக்ஸ் எடுத்து நடித்து வரும் திரைப்படம் 'படைத்தலைவன்'.
காட்டு யானைகளின் வாழ்வியலை பற்றி எடுத்து கூறும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்த படத்தை இயக்குனர் அன்பு என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் பெரும்பாலும் கேரளா, ஆந்திரா, தாய்லாந்து போன்ற வனப்பகுதியில் படமாக்கப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், தற்போது இப்படமா குறித்த முக்கிய அப்டேட் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த படத்தில், நடிகர் ஷண்முக பாண்டியனுடன் கை கோர்த்துள்ளார் ராகவா லாரன்ஸ். இதுகுறித்து இப்படத்தின் இயக்குனர் கூறுகையில்...புரட்சி கலைஞர் விஜயகாந்த் அவர்கள் மறைவுக்குப் பிறகு, ராகவா லாரன்ஸ் மாஸ்டர் ஒரு வீடியோ வெளியிட்டு இருந்தார். அதில் சண்முக பாண்டியன் நடிக்கும் படை தலைவன் படத்தில், சிறப்பு தோற்றத்தில் நான் நடிக்க ரெடியாக உள்ளேன் என்று தெரிவித்து இருந்தார். இந்த வீடியோ பார்த்து இயக்குனராகிய நான் மாஸ்டரை எப்படியாவது இந்த படத்தில் கொண்டு வர வேண்டும் என்று விரும்பினேன். படத்தில் முக்கியமான இடத்தில் 5 நிமிட காட்சிக்கு மட்டுமே இடம் இருந்தது. இதை மிகுந்த தயக்கத்துடன் ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களிடம் கூறினேன். ஆனால் அவர் எந்த யோசனைக்கும் இடம் தராமல், நான் நடித்து தருகிறேன் என்றார்.
எவ்வளவு நிமிடம் நான் வருகிறேன் என்பது முக்கியம் அல்ல. தம்பி சண்முக பாண்டியன் படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி என்றார். இதை கேட்டதும் இயக்குனராக எனக்கு மிகுந்த சந்தோஷம். கேப்டன் அவர்கள் மேல் அவர் வைத்த மரியாதைக்கும், அவர் சொன்ன வார்த்தையை காப்பாற்றும் வகையிலும் எந்த நிபந்தனையும் இன்றி உடனே ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்கள் ஒத்துக் கொண்டது ,அவரின் பெருந்தன்மையை காட்டுகிறது.. மேலும் தயாரிப்பாளர், மாஸ்டர் சம்பளம் பற்றி பேசியபோது, எந்த சம்பளமும் எனக்கு வேண்டாம், 4 ஏழ்மை நிலையில் இருக்கும் குடும்பங்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்தால் போதும் என்றார். ராகவா லாரன்ஸ் மாஸ்டர் அவர்களின் இந்த அணுகுமுறை படை தலைவனுக்கு மேலும் வலு சேர்த்தது போல இருந்தது. இந்த மகிழ்வான செய்தியை , ஊடகங்களுக்கு தெரிய படுத்துவதில், படக் குழுவினர் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம் என இயக்குனர் அன்பு தெரிவித்துள்ளார்.