கோடையில் வெள்ளரிக்காய் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அதனால் தான் இதை பலர் சாலட்டில் சேர்த்து தினமும் சாப்பிடுகிறார்கள். ஆனால் வெள்ளரிக்காய் தண்ணீர் உங்கள் முகத்தின் பொலிவை கொடுகும் என்பது உங்களுக்கு தெரியுமா..?
அதுமட்டுமன்றி, இதிலிருந்து தயாரிக்கப்படும் ஃபேஸ் பேக் கோடையிலும் உங்கள் முகத்தை பிரகாசமாக்கும். காரணம், வெள்ளரிக்காய் உடலை குளிர்ச்சியாக்கும். எனவே, இது கோடை காலத்தில் உங்கள் சருமத்தை பளபளப்பாக வைத்திருக்க உதவுகிறது. சரி இப்போது, இந்த கட்டுரையில், வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் தயாரிப்பது எப்படி மற்றும் அதை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பதை குறித்து பார்க்கலாம்.
வெள்ளரிக்காய் தண்ணீர் மற்றும் தேன்: வெள்ளரி நீரில் 2 முதல் 3 சொட்டு தேன் கலக்கவும். பிறகு ஒரு மேக்கப் ஸ்பாஞ்ச் அல்லது பிரஷ் உத்கவியுடன் அந்த நீரை முகத்தில் தடவவும். இதை நீங்கள் தொண்டை மற்றும் கழுத்து பகுதியிலும் தடவலாம். ஏனென்றால், சூரிய ஒளியால் அந்த பகுதி கருமையாக இருக்கும். முகம் நன்கு காய்ந்தவுடன் சுத்தமான நீரால் முகத்தை கழுவவும். இதை நீங்கள் தொடர்ந்து செய்து வந்தால் கோடை காலத்தில் உங்கள் முகம் கருமையாக மாறாது. மேலும் இது உங்கள் முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்கும்.
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் நன்மைகள்: வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக் கோடை காலத்தில் உங்கள் முகத்தை குளிர்ச்சியாக்கும். காரணம், இதில்
அதிகளவு நீர்ச்சத்து இருப்பதால், அது உங்கள் முகத்திற்கு நன்மை பயக்கும். எனவே, இந்த ஃபேஸ் பேக்கை வாரத்தில் 2 முதல் 3 நாட்கள் பயன்படுத்தலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D