செய்தி வாசிப்பாளராக இருந்து, பின்னர் சின்னத்திரை நடிகையாக மாறியவர் பிரியா பவானி ஷங்கர். இவர் நடித்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து, திரைப்பட வாய்ப்பு இவர் தேடி செல்லாமலே இவர் கதவை தட்டியது. அதன்படி, இயக்குனர் ரத்னகுமார் இயக்கத்தில் வைபவ் ஹீரோவாக நடித்த 'மேயாத மான்' படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தார்.
இரண்டு வருடத்தில் தமிழ் சினிமாவில் தனைக்கென தனி இடத்தை பிடித்தது மட்டும் இன்றி, 5 வருடத்தில் கோடிகளில் சம்பளம் பெரும் முன்னணி நாயகியாக உயர்ந்தார். தற்போது இவரில் கைவசம் டிமான்டி காலனி 2, இந்தியன் 2 ஆகிய படங்கள் வெளியாக உள்ளது. இதை தவிர சூப்பர் அரை டஜன் படங்களை கைவசம் வைத்துள்ளார். தமிழை தாண்டி தெலுங்கிலும் ஹீரோயினாக நடித்து வருகிறார்.