சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

பிரதமர் மோடி அரசமுறைப் பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், நேற்று ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இந்தியர்கள் மத்தியில் உரையாற்றினார். இந்த நிகழ்ச்சியின் போது ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி ஆல்பனீஸ் உடனிருந்தார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த நிலையில் மோடியின் வருகையை ஒட்டி, சிட்னி துறைமுகம் மற்றும் ஒபேரா ஹவுஸ் ஆகியவை இந்தியாவின் மூவர்ண கொடிகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

Scroll to load tweet…

முன்னதாக சிட்னியில் உள்ள அட்மிரால்டி இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடிக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அட்மிரால்டி மாளிகையில் பார்வையாளர்கள் புத்தகத்திலும் பிரதமர் மோடி கையெழுத்திட்டார். இதை தொடர்ந்து பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸ் உடன் முறையான கலந்துரையாடல் நடத்தினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல், பாதுகாப்பு, மூலோபாய கூட்டாண்மை மற்றும் வர்த்தகம் போன்ற பரந்த தலைப்புகளில் தலைவர்கள் விவாதித்தனர்.

இதையும் படிங்க : மோடியை தனது 'பாஸ்' என்று ஆஸ்திரேலியா பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் குறிப்பிடக் காரணம் என்ன?

ஆஸ்திரேலியாவும் இந்தியாவும் ஒரு புதிய இடம்பெயர்வு கூட்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன, மேலும் இரு நாடுகளையும் நெருக்கமாகக் கொண்டுவர பசுமை ஹைட்ரஜன் தொழில்நுட்பத்தில் பணியாற்ற ஒப்புக்கொண்டுள்ளன.

மேலும் ஆஸ்திரேலியாவில் உள்ள கோவில்கள் மீதான தாக்குதல்கள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி குறித்து கேள்வி எழுப்பினர். எனினும் எதிர்காலத்தில் இதுபோன்ற கூறுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்று பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார்.

பிரதமர் மோடி 2014 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக ஆஸ்திரேலியா சென்றுள்ளார். ஆஸ்திரேலியாவின் ஆறாவது பெரிய வர்த்தகப் பங்காளியாக இந்தியா உள்ளது, ஆஸ்திரேலியாவில் சுமார் 750,000 பேர் இந்திய வம்சாவளியினர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : சிட்னிக்கு பிரதமர் மோடி வருவதை முன்னிட்டு விமானங்கள் மூலம் வானில் வெல்கம் மோடி வரவேற்பு!!